“ஆச்சரியம் ஆனால் உண்மை..!” – இப்படியெல்லாம் கடவுள் காட்சி தருவாரா?

உலக அதிசயங்கள் ஏழு பற்றி நாம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அது போலவே கடவுள் எழுந்தருளி இருக்கும் கோயில்களிலும் சில ஆச்சரியம், அதிசயங்களும் கலந்து உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா.

ஆனால் அது உண்மைதான் அப்படி அதிசயம் நிறைந்த ஆன்மீக தகவல்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆச்சரியமான ஆன்மீகத் தகவல்கள்

பொதுவாகவே அனுமனுக்கு குரங்கின் முகம் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதற்கு மாறாக சேலத்துக்கு அருகில் இருக்கும் அழகிரி நாத சுவாமிகள் கோயிலில் சிங்க முகத்தோடு இருக்கும் ஹனுமானை நீங்கள் தரிசிக்க முடியும்.

பொதுவாகவே வெடி வழிபாடு என்பது கேரளாவில் இருக்கும் கோயில்களில் மட்டுமே நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதுபோலவே தமிழ்நாட்டிலும் காங்கேயம் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இந்த வெடி வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு இந்த வெடி வழிபாடானது கால்நடைகளுக்கு நோய்நொடி ஏற்படாமல் இருப்பதற்காக நடக்கிறது என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

தசாவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் நரசிம்ம அவதாரத்தில் மகாவிஷ்ணு சிங்க முகத்தோடு காட்சியளிப்பார். அதே போல் அவரது மனைவியான மகாலட்மியும் மேல் அவணியாபுரத்தில் இருக்கும் கோயிலில் சிங்கமுகத்தோடு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

யானை முகத்தோடு இருக்கும் விநாயகப் பெருமான் திருமீயச்சூர் பக்கத்தில் இருக்கும் செதலபதி மற்றும் சிதம்பரம் தெற்கு வீதிகளில் மனித முகத்தோடு நமக்கு அருள் பாலிக்கிறார். இது மிகவும் ஆச்சரியமான விஷயம் தானே.

கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் நாச்சியார் கோயிலில் திருவிழா நடக்கும் போது கல் கருடன் வீதி உலா நடப்பது வாடிக்கையான விஷயம். இந்த வீதி உலா நடக்கும் போது கல் கருடன் வெளியே வரும் போது அதன் எடை கூடிக் கொண்டே வருமாம். பிறகு கோவிலுக்குள் செல்லும்போது எடை குறைந்து கொண்டே செல்லும் என கூறப்படுகிறது. இது ஒரு ஆன்மீக அற்புதம் தானே.

வேலூர் பக்கத்தில் இருக்கும் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் பக்தர்களுக்கு இன்று வரை அருள்புரிந்து வருவது மிகவும் சிறப்பான விஷயமாகும்.

பெண் வடிவ தட்சணாமூர்த்தியை நீங்கள் தரிசிக்க வேண்டும் என்றால் சிதம்பரத்தில் இருக்கும் தில்லைகாகாளி ஆலயத்தின் பிரகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்தி தான் ரூபிணி எனும் பெண் வடிவத்தில் காட்சி தருகிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …