கடவுள் வழிபாட்டில் முக்கியமாக வைணவர்கள் பயன்படுத்தக்கூடிய திருநாமக் கட்டி நம் சருமத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது. இதனை சருமத்துக்கு பயன்படுத்துவது மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்கு, பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மை வெளியேறி அழகாக மாற்றும் குறிப்புகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
அழகுக் கலையில் நாமக்கட்டி
நாமக்கட்டியை நன்கு உரைத்து உங்கள் முகத்தில் முழுவதும் தேய்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வழிதல், பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடும். அப்படி உங்கள் முகத்தில் நாமக்கட்டியை தேய்த்த பிறகு அது நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்தில் இருக்கக்கூடிய கூடுதல் எண்ணெய் பசையை நாமக்கட்டி உறிஞ்சி கொள்வதால் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்குவதோடு முகப்பரு பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபட முடியும்.
சில பேருக்கு ஒவ்வாமை காரணமாக சருமங்களில் தடிப்புகள் ஏற்படும். அப்படி தடிப்புகள் ஏற்பட்டால் அந்த பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். இதனை தவிர்க்க நீங்கள் நாமக்கட்டியை அந்த இடத்தில் உரைத்துப் போட்டால் போதுமானது.
சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்க நாமக்கட்டி பெரும் அளவு உதவி செய்கிறது. எனவே இதனை நீங்கள் உரைத்து ரோஸ் வாட்டரில் குழைத்து முகம் மற்றும் சருமத்தில் தேய்த்துக் கொள்ளலாம்.
முகத்தில் இருக்கக்கூடிய சருமத்துளைகளை நல்ல முறையில் சுத்தம் செய்து அது அடைப்படுவதை தடுக்கக்கூடிய இயற்கை நிவாரணையாக நாமக்கட்டி திகழ்வதால் வாரத்தில் ஒருமுறை உங்கள் முகத்தில் குறைத்து பூசுவதின் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும்.
வயது முதிர்வு காரணமாக சேதம் அடைந்த சரும திசுக்களை குணப்படுத்தி அதை புத்துணர்வு பெற செய்யக்கூடிய மிகச்சிறந்த ஊக்கியாக நாமக்கட்டி திகழ்கிறது. இதனால் வயது ஆகும் போது ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றத்தை உங்களுக்கு தருகிறது.
இயல்பான சரும நிறத்தை இது தர உதவுவதால் நீங்கள் கட்டாயம் இந்த நாமக்கட்டியை பயன்படுத்துவதின் மூலம் பக்க விளைவுகள் இல்லாத நன்மைகளை எளிதில் பெற முடியும்.