‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ சொல்லி அடித்த ‘பத்து தல’ சிலம்பரசன்..!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கிற சிலம்பரசன். கலையுயுலக அஷ்டவதானி என அழைக்கப்படும் டி. ராஜேந்திரனின் மகன் இவர். தனது சிறு வயதிலேயே தந்தை இயக்கிய படங்களில் நடித்து, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். பிஞ்சு கை கால்களை நீட்டி சிம்பு ஆடிய நடன அசைவுகளும், மழலை குரலில் அவரது பேசிய பஞ்ச் வசனங்களும், அந்த வயதிலேயே, நிறைய ரசிகர்களை உருவாக்கி தந்தது.

காதல் அழிவதில்லை படத்தின் மூலம்,. வாலிபனாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த சிம்ப மன்மதன், வல்லவன், குத்து, தம், விண்ணை தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, ஈஸ்வரன் என, பல படங்களில் நல்ல நடிகர் என நிரூபித்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில், சிம்புவின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. இனி சிம்பு அவ்வளவுதான், சினிமாவிலும் ஜெயிக்கவில்லை, காதலித்த பெண்களும் அவரை ஏமாற்றி விட்டனர் என, பலரும் சிம்புவை விமர்சித்தனர்.

ஆனால், வீறுகொண்ட வேங்கையாக, தனது சினிமா பயணத்தில் அடுத்த பயணத்தை அதிரடியாக துவங்கினார் சிம்பு. அதன் வெளிப்பாடாக வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் மாஸ் என்ட்ரி ஆக வந்தார். அடுத்து, கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, சிம்புவின் அபார வெற்றிபப்படமாக அமைந்தது.

இப்போது, பத்துதல படத்தின் மூலம், சொல்லி அடித்திருக்கிறார் சிம்பு. பத்து தல படம் காண தியேட்டருக்கு வந்த சி்ம்புவின் தாயார் விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடக்கும் என உறுதிபட கூறியிருப்பது, இந்த ஆண்டு சிம்புவின் சிறப்பான ஆண்டு என்பதை நிரூபித்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …