விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்று நினைத்தாலே நினைவுக்கு வருபவர் விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே அவர்கள். இவர் கர்நாடகத்தில் 1990 ஏப்ரல் 28 ஆம் நாள் பிறந்தவர் இவருக்கு ரோஹித் என்ற சகோதரர் உள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு சென்னைக்கு குடியேறிய இவர்கள் ஸ்டைன்ட் ஆன்டனி ஸ்கூல் என்ற பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்கள் மேலும் எத்திராஜ் காலேஜ் ஃபார் உமனில் பிரியங்கா அவர்கள் தனது டிகிரியை முடித்தார்.
தனது முன்னாள் காதலரான பிரவீன் குமார் உடன் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா அவர்கள். பிரியங்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திக் க்ரிஸ்பி கேர்ள் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அழகிய பெண்ணை மற்றும் இசை போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொகுப்பாளராக வேலை செய்து வந்தார்.
அதன்பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து சன் டிவிக்கு மாறிய இவர் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அதில் முக்கியமானது டாடி மை ஹீரோ மாமிஸ் டே அவுட் மேலும் சூரிய வணக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கது இதில் சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியில் முக்கியமான விருந்தினர்களை அழைத்து பேசும் இந்த நிகழ்ச்சியை இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறிய பிரியங்கா அவர்கள் சினிமா காரம் காபி என்ற முதல் ஷோவை விஜய் டிவியில் தொகுத்து வழங்கினார் இந்த ஷோ மிகப்பெரிய ஹிட் அடிக்குது இவருக்கு விஜய் டிவியில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கான தொகுப்பாளர் பணி கொடுக்கப்பட்டது அதன் பிறகு ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதன் பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து வந்தார் அதன் பிறகு சூப்பர் சிங்கர் ஜூனியரில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கினார் பிரியங்கா அவர்கள் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனலாம் இந்த நிகழ்ச்சியில் இவரது தொகுத்து வழங்கும் வேலை மிகப் பெரிய அளவு அனைவராலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வேலையில் தான் சிவகார்த்திகேயன் அவர்கள் சீரியலில் இருந்து நடித்த போவதற்காக திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு கிங் ஆப் டான்ஸ் கிங் ஆப் காமெடி அச்சம் தவிர் சூப்பர் சிங்கர் 6 சூப்பர் சிங்கர் 7 சூப்பர் சிங்கர் 8 சூப்பர் சிங்கர் 9 ஸ்டார் மியூசிக் போன்ற தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் பிரியங்கா அவர்கள். சீரியலில் நடித்து வந்தாலும் சில படங்களிலும் சிறிது கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் 2018 ஆம் ஆண்டு வெளியான ராணி ஆட்டம் என்ற திரைப்படத்தில் சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் 2016 ஆம் ஆண்டு உன்னோடு வாழ்ந்தால் வாரமல்லவா என்ற திரைப்படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தவரும் இவர் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் உள்ளார் இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்த படியுங்கள்.