“ஐயப்பன் கிட்ட உங்கள் குறைய இப்படி சொல்லுங்க..!” – கட்டாயம் ரெமடி கிடைக்கும்..!

கலியுகத்தில் பாவங்களை களைந்து மக்களை காக்கக்கூடிய மிகப்பெரிய பணியை  செய்வதாக நம்பிக்கை நிலவுகிறது.அப்படிப்பட்ட ஐயப்பன் சபரிமலையில் இருக்கக்கூடிய சன்னிதானத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி வருகிறார்.

நீங்கள் உங்கள் குறைகளை ஐயப்பன் தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு என்று ஒரு மார்க்கம் உள்ளது. இந்த மார்க்கம் பலருக்கும் தெரியாது. இந்த வழியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்திலிருந்து விலக்கு கிடைக்கும்.

அது எப்படி என்று நீங்கள் நினைப்பது நன்றாக தெரிகிறது. சபரிமலை சன்னிதானத்தில் இருக்கும் மளிகை புறம் கோவில் அருகே ஒரு போஸ்ட் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ் மகர விளக்கு பூஜை செய்யும் காலத்தில் ஐயப்பனுக்கு பக்தர்கள் அனைவரும் கடிதம் அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் அவர்களது கோரிக்கைகளை எழுதி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களையும் எழுதி அனுப்புவார்களாம். அது மட்டுமல்லாமல் அவர்களின் கோரிக்கை நிறைவேறினால் அதற்கான காணிக்கையை மணியார்டர் மூலம் இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

இங்கு அனுப்பப்படும் கடிதங்களை ஐயப்பனே பிரித்து படித்து அவர்களின் குறையை தீர்த்து வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இந்த கடிதத்தை ஐயப்பன் முன்வைத்து நிர்வாக அதிகாரிகள் பிரித்து படிப்பார்களாம்.

 இந்த முறையானது 1963 லிருந்து செயல்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் இருக்கக்கூடிய முத்திரையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

எனவே இந்த முத்திரையோடு இருக்கும் கடிதங்கள் தங்கள் வீட்டுக்கு வருவதை பக்தர்கள் புனிதமாக கருதி வருகிறார்கள். சபரிமலைக்கு என்றே ஒரு தனி முத்திரையும் கொடுக்கப்பட்டிருப்பது வேறு எந்த தபால் நிலையத்திலும் இல்லாத நிலையாகும்.

மகர விளக்கு பூஜையின் சமயத்தில் மட்டுமே இந்த தபால் எண் செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு 62 நாட்களுக்குப் பிறகு இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணானது செயல் இழப்பு செய்யப்பட்டு அடுத்த மகர விளக்கு பூஜை சமயத்தை மட்டுமே பயன்படுத்தப்படும்.

எனவே நீங்களும் இதை பயன்படுத்தி உங்கள் கோரிக்கைகளை கடிதங்களாக ஐயப்பனுக்கு அனுப்புவதின் மூலம் விரைவில் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …