பிரியதர்ஷினியை (priyadarshini) திரையில் சிறுமியாக பார்த்த போதே, நமக்கு பிடித்து போய்விட்டது. இப்போது, அதை விட பன்மடங்கு பிடித்த நடிகையாகவே பிரியதர்ஷினி இருக்கிறார். பன்முக தன்மை கொண்ட இவர், ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலமானவராக இருக்கிறார்.
35 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘தாவணிக்கனவுகள்’ படத்தில், ஒரு காட்சி வரும். சினிமா தியேட்டரில் தனது ஐந்து தங்கைகளுடன் அமர்ந்து, பாக்யராஜ் படம் பார்த்துக்கொண்டிருப்பார்.
திரையில் நாயகியும் நாயகனும் படுக்கையறையில், கிளுகிளுப்பான காட்சி ஓடிக்கொண்டிருக்க, அந்த காட்சியை தனது வயது வந்த தங்கைகள் பார்க்க கூடாது என்பதற்காக, அந்த காட்சி வரும்போது எல்லாம், ஐந்து பைசாவை கீழே வீசிவிட்டு அதை எடுத்து தருமாறு தங்கைகளை வற்புறுத்துவார். அவர்கள் இருக்கைகளுக்கு கீழே காசை தேடுவார்கள். அதன்பின், அந்த காட்சி மாறிய பின், ‘பரவாயில்ல விடுங்க, படம் பாருங்க’ என, அவர்களை படம் பார்க்க அனுமதிப்பார்.
priyadarshiniஇப்படி சிலமுறை காசுகளை கீழே போட்டு தங்கைகள், அந்த மாதிரி காட்சிகளை பார்க்க விடாமல் தடுக்கும் பாக்யராஜ், ஒரு கட்டத்தில் படத்தில் வரும் காட்சியில் லயித்து போய் மெய் மறந்து வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, அப்போது அந்த வேளையில் பாக்யராஜின் கடைசி தங்கையாக நடித்திருக்கும் சிறுமி பிரியதர்ஷினி, பாக்யராஜை அழைத்து, ‘அண்ணா அய்யோ, அங்க பாரு, காசு போட மறந்துட்டே? எனக் கூறுவார். இந்த காட்சியில் பாக்யராஜ் நடிப்பு மட்டுமின்றி, பிரியதர்ஷினியின் நடிப்பும் பலத்த கைதட்டலை பெற்றது. சிவாஜி கணேசன் நடித்த சில காட்சியிலும் இவரை நடிக்க வைத்திருப்பார் பாக்யராஜ்.
priyadarshiniகடந்த பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.சிறுமியாக பல படங்களில் பிரியதர்ஷினி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தாவணி கனவுகள் மற்றும் காவல் கைதிகள், நாகம், நாகதேவதை, குற்றவாளிகள், இதயக்கோவில், உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பிடி என சுருக்கமாக, பிரியதர்ஷினி அழைக்கப்படுகிறார்.
தற்போது, இவருக்கு 44 வயது ஆகிறது. சென்னை தான் சொந்த ஊர். இவரதுசொந்த சகோதரி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவரும் டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். சகோதரர் பிஸினஸ் நடத்தி வருகிறார். பிரியதர்ஷினிக்குஆ நடனத்தில் விருப்பம் கொண்டவர்.
இதுவரை, ஆயிரம் மேடைகளுக்கு மேல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி செய்திருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் படைத்த பிரியதர்ஷினி சிறந்த நடனக்லைஞர்.
பிரியதர்ஷினி, டிவி சீரியல்களில் பிஸியாக உள்ள நடிகைகளில் ஒருவர். அக்னி பரீட்சை, விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், விசாலம், ரேகா ஐபிஎஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.மேலும், சுபயாத்ரா, கல்கி, புலி வருது ஆகிய படங்களில் நடித்திருந்தார் பிரியதர்ஷினி. தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவருக்கு, ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
priyadarshiniசமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியதர்ஷினி தொடர்ந்து, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அதற்கு, லைக்ஸ் குவிகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.