ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) சினிமா ரசிகர்களால் சித்தி என அழைக்கப்படுகிறார். சினிமாவில், சீரியலில் ராதிகா எப்பவுமே டாப் நடிகைதான். நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மகன். நடிகர் ராதாரவியின் சகோதரி. இவரது கணவர் சரத்குமார். ராடன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என பல அடையாளங்கள் கொண்டவர். பல படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். முதல் மரியாதை படத்தில், நடிகை ராதாவுக்கு பின்னணி குரலில் பேசியது ராதிகா தான்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகமானார் ராதிகா. நடிகர் சுதாகர் தான் இந்த படத்தின் கதாநாயகன். அடுத்தடுத்த படங்களில் நடித்த ராதிகா, மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த காலகட்டத்தில்தான் விஜயராஜ் என்ற விஜயகாந்த், தமிழ் சினிமாவில் அறிமுக நாயகனாக வலம் வந்தார். ஒருமுறை விஜயகாந்த் நடிக்கும் படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக ராதிகாவிடம் கேட்டுள்ளனர்.
ஆனால், கருப்பாக உள்ள விஜயகாந்துடன் நடிக்க ராதிகா மறுத்துள்ளார். அதன்பின், விஜயகாந்தும் பிரபலமாக, நீதியின் மறுபக்கம் படத்தில் ராதிகா, விஜயகாந்துடன் ஜோடியாக நடித்தார். அதன்பின் பல படங்களில் இந்த ஜோடி ஒன்றாக நடித்தது. படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.
Radhika Sarathkumarபூந்தோட்டக் காவல்காரன், உழவன், நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், நல்லவன், வீரபாண்டியன், உழைத்து வாழ வேண்டும், சிறைப்பறவை, இனிக்கும் இளமை, உள்ளம் கவர்ந்த கள்வன், தென்பாண்டி சீமையிலே, தர்மதேவதை என பல படங்களில் விஜயகாந்த் – ராதிகா ஜோடி அற்புதமாக அமைந்தது.
இந்நிலையில், இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்த பழக்கத்தால், அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்துகொள்ளவும் ராதிகா அதிகமாக விரும்பினார். இருவரது வீட்டிலும், இதுகுறித்து பேசப்பட்டது.
ஆனால், விஜயகாந்த் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளதால், விஜயகாந்த் அதை மறுக்க முடியவில்லை. திருமணத்துக்காக, ராதிகாவுக்கு விஜயகாந்த் ஆசையாக புடவை எடுத்த நிலையில், இந்த திருமணம் நின்று போயுள்ளது. இதனால், விஜயகாந்தை விட அதிகளவில் வேதனைப்பட்டது ராதிகா தானாம்.
Radhika Sarathkumarஇதைத்தொடர்ந்து, ராதிகாவை மனைவியாக்கிக் கொள்ள முடியாத வேதனையில், விஜயகாந்த் தனது திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். ராதிகா மீதுள்ள காதலால் அவர் திருமணத்தை தள்ளி போட்டுள்ளார்.
இந்நிலையில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராவுத்தர் தான், பிரேமலதாவை அறிமுகப்படுத்தி, திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். புகைப்படத்தில், ராதிகா போன்ற ஒரு சாயலில் பிரேமலதா இருந்ததால், திருமணத்துக்கு விஜயகாந்த் ஓகே சொன்னதாக தகவலும் உள்ளது.
Radhika Sarathkumarராதிகாவை, விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டிருந்தால், இப்போது ராதிகா சரத்குமார் என்பது, ராதிகா விஜயகாந்த் என மாறி இருந்திருக்கும்.நடிக்க வந்த புதிதில், விஜயகாந்த் கருப்பாக இருப்பார். உடையலங்காரம், ஸ்டைலில் அவ்வளவு கவனம் செலுத்த மாட்டாராம். மதுரைக்காரர் என்பதால், சினிமாவில் பிரபல நடிகராக ஆன பிறகும், அதே போல் மண் மணம் மாறாமல், இயல்பாக கிராமத்துக்காரர் போலவே இருந்திருக்கிறார்.
Radhika Sarathkumarஅவரை, ஒரு ஹீரோவுக்குரிய நடை, உடை, நாகரிகம், பழக்கவழக்கங்கள் என மாற்றியதில் ராதிகாவுக்கு பெரும்பங்கு உள்ளது என்று, தமிழ் திரையுலகில் அப்போதே பேசப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் உடன் மண வாழ்க்கை கை நழுவிப் போனாலும், இப்போது சரத்குமார் என்ற சுப்ரீம் ஸ்டார் நடிகர், கணவராக அமைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ராதிகா.