செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான நடிகை சரண்யா துராடி ( Sharanya Turadi ) சுந்தர்ராஜ் கடந்த 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். செய்தி வாசிப்பாளராகவும் மாடல் அழகியாகவும் தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி கொண்டிருந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு 17 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாற்றியது. அதன் பிறகு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதனை ஏற்றுக்கொண்டு நடித்து வந்த இவர் தற்பொழுது எந்த ஒரு சீரியல் மற்றும் மீடியா சார்ந்த விஷயத்தில் பங்கேற்காமல் இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஆயுத எழுத்து என்ற சீரியலில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுதான் இவருடைய கடைசி சீரியல் ஆகும் அதன்பிறகு அவ்வப்போது தொலைக்காட்சியில் தலை காட்டும் சரண்யா துராடி சுந்தர்ராஜ் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
Sharanya Turadiஇந்நிலையில் இவர், வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.