முகம் பொலிவு:அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். எனவே உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடு முகத்தில் தெரியும். தூய்மையான எண்ணங்களோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை நீங்கள் பெற முடியும்.
Face Glowing Tipsஅந்த வகையில் உங்கள் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள உதவும் டிப்ஸ்
உங்கள் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் நல்ல முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும். தூக்கம் கெடும் போது உங்கள் முகப்பொலிவு குறைந்து விடும்.
Face Glowing Tipsஉங்கள் உணவில் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக காய்கறிகள் பழ வர்க்கங்கள், கீரைகள் ,தானியங்கள் போன்றவற்றை அதிகளவு எடுத்துக் கொள்வதின் மூலம் முகத்தில் ஏற்படுகின்ற எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படாமல் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நீங்கள் உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வது அவசியம். அதுபோல தண்ணீரை அவசியமான சமயத்தில் கட்டாயம் பருகுங்கள். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியமாகும்.
மேலும் வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் முகத்திற்கு ஆவி பிடிக்கலாம் .ஆவி பிடிப்பதற்காக நீங்கள் வேப்பிலை சாறு, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிப்பதன் மூலம் முக துவாரங்களில் படிந்திருக்கும் அழுக்கு வெளியேறி முகப்பரு, எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படாமல் முகம் பளபளப்பாகும்.
அது போலவே வாரத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவுவதன் மூலம் முகப்பொலிவு எளிதில் ஏற்படும்.
முகத்துக்கு செயற்கையாக தயாரிக்கப்படும் சோப்புகளை தவிர்த்து விட்டு இயற்கை பொருட்களான பாசி பயிறு மாவு, கடலை மாவு, அரிசி மாவு போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் முகப்பொலிவை அதிகரித்துக் கொள்ள முடியும்.
எனவே யாரும் தயவு செய்து இனிமேல் ரசாயன க்ரேமகளை தடவ வேண்டாம்.இதனால் எண்ணற்ற பாதிப்புகள் உருவாக்கி வருகிறது.