மீனா,(Actress Meena) அன்று முதல் இன்று வரை கொஞ்சுகிற அழகில், ரசிகர்களின் மனதை பறித்தவர். பல நடிகையர், மேக்கப் செய்தால் மட்டுமே, மிக அழகான தோற்றத்தில் காணப்படுவர். ஆனால், நடிகை மீனா போன்ற ஒரு சிலரே, இயல்பிலேயே மிக அழகானவர்களாக இருக்கின்றனர். அதுவும், மீனாவின் துருதுரு பார்வையும், கண்கள் படபடத்து சிமிட்டுகிற அழகும், முத்துப்பற்கள் தெறிக்கிற சிரிப்பும், சதை பிடிப்பான உதடுகளும், உப்பலான கன்னங்களும், வட்டவடிவமான முகமும் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டது என்றால் அது மிகையல்ல.
மீனா, தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தேவதை நாயகியாக வலம் வந்தவர். சிறுவயதிலலேயே அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் எஜமான், முத்து, வீரா, அவ்வை சண்முகி, தாய் மாமன், பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற பல படங்களில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் அபரிமிதமான அன்பை, வரவேற்பை பெற்றவர்.
இவரது கணவர் வித்யாசாகர், கடந்தாண்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில், நடிகை மீனாவின் நீண்டகால குடும்ப நண்பராக உள்ள கலா மாஸ்டர் ஏற்பாட்டின்படி, மீனா 40 என்ற பாராட்டு விழா நடத்தப்பட்டது. மீனா, சினிமாத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மீனாவுடன் ஜோடியாக நடித்த சரத்குமார் உள்ளிட்ட ஹீரோ நடிகர்கள், அவர் நடித்த படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள், மீனாவின் நீண்டகால தோழிகளாக உள்ள ராதிகா உள்ளிட்ட நடிகையர் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு, மீனாவை பாராட்டி, வாழ்த்தி, சினிமா படப்பிடிப்புகளில் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, மேடையேறி மீனாவை பாராட்டிப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு தனது கணவர் வித்யாசாகர் மறைவால், மனம் வாடி போயிருந்த மீனா, சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். அதன்பின், மீண்டும் மனதை தேற்றிக்கொண்டு, த்ரிஷியம் 3 படத்தில், மோகன்லாலுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார். இப்போது, கமிட் ஆன மற்ற படங்களில் நடித்து வருகிறார்.
Actress Meenaமீனாவை பொருத்த வரை, அழகான நடிகை மட்டுமல்ல, நல்ல நடிப்பாற்றலும் கொண்ட நடிகை. குறிப்பாக என் ராசாவின் மனசிலே படத்தில், ராஜ்கிரண் ஜோடியாக நடித்திருப்பார். காலையில் தூங்கி எழுந்தவுடன், குடிநீருக்கு பதிலாக, பாட்டில் சாராயத்தை குடிக்கும் முரட்டு மனிதரான மாயாண்டிகேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருக்க, மாயாண்டியை பார்த்தாலே பயந்து நடுங்கும் சோலையம்மா கேரக்டரில் மீனா நடித்திருப்பார். ஒரு கட்டத்தில், கணவரின் அன்பை புரிந்துக்கொள்ளும் காட்சியில், இறந்துபோவார். இந்த படத்தில் மீனா, பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை, பாராட்டை பெற்றார்.
அதேபோல், சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா படத்தில், தேவர் வீட்டு மகளாக இருந்துகொண்டு, தன் வீட்டில் வேலை செய்யும் கீழ் ஜாதி பாரதியை காதலிக்கும் பெண்ணாக, அசத்தலான நடிப்பை தந்திருப்பார். இதுபோல், பல படங்களில் மீனாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்துள்ளது.
Actress Meenaஅதனால்தான், இன்னும் தமிழ் சினிமாவில் மீனாவுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. கடந்தாண்டுபு, ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில், மீனா நடித்திருந்தார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் வந்த இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிக்கும், மீனா மீனா தான் என, கமெண்ட் செய்து லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.