ரித்விகா, (Riythvika) தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம்தான்.ரித்விகா, சென்னையை சேர்ந்தவர். சேலத்தில் பிறந்தவர். சென்னை தேனம்பேட்டை நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நல்ல நடிப்பை தந்திருப்பார். தேயிலை தோட்டத்தில் இலை பறிக்கும் பெண் கேரக்டரில், சிறப்பாக நடித்திருப்பார். அடுத்து, இயக்குநர் விக்கிரமன் இயக்கத்தில், நினைத்தது யாரோ படத்திலும் ரித்விகா நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில், வடசென்னை பெண்ணாக, மேரி என்ற கேரக்டரில் கலையரசன் மனைவியாக நடித்திருப்பார்.
ரித்விகா, ஸ்டார்ச் லைட் என்ற படத்தில் ரோட்டோரத்தில் புளியமரத்தடியில், லாரி டிரைவர்களை அழைக்கும் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேரக்டரில் அம்மணி செம கிளாமர் காட்டி, ரசிகர்களை உசுப்பேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த துணை நடிகை பிலிம்பேர் விருது, ரித்விகாவுக்கு வழங்கப்பட்டது.
Riythvikaஒருநாள் கூத்து என்ற படத்தில், பண்பலை ஒலிபரப்பு தொகுப்பாளராகவும் நடித்திருப்பார். கவுண்டமணி நடித்த, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையது படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திலும் நடித்தார். பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில், மிக வித்யாசமான ஒரு கேரக்டரில் ரித்விகா நடித்திருந்தார். அழகு குட்டிச்செல்லம், அஞ்சலை, இருமுகன் உள்ளிட்ட படங்களிலும் ரித்விகா நடித்திருக்கிறார்.
ரித்விகாவுக்கு நல்ல பப்ளிசிட்டியை தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2ல், போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற ரித்விகா, இறுதியில் டைட்டில் வினனர் ஆக அறிவிக்கப்பட்டார். யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றியாக, இது அவருக்கு அமைந்தது.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத் ராகவேந்திரா, டேனியல், வைஷ்ணவி, ஜனனி ஐயர், அனந்த வைத்தியநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, மமதி சச்சாரி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 105 நாட்கள் வரை நீடித்த இந்த சீசனை, உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், வாரந்தோறும் பார்வையார்களின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில், ஒவ்வொரு போட்டியாளராக வீட்டை விட்டு, வாரந்தோறும் ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில், 13 பேர் வெளியேறிய நிலையில், இறுதி வாரத்தில் விஜயலட்சுமி ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் மட்டுமே இருந்தனர். இதில் ஜனனி, விஜயலட்சுமி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவர் மட்டுமே இறுதியாக இருந்தனர்.
Riythvikaவீட்டுக்குள் அதிக அட்ராசிட்டி செய்து, பார்வையாளர்களை பரபரப்பாக்கிய ஐஸ்வர்யா தத்தா தான் வின்னர் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கமல்ஹாசன் ரித்விகா வை டைட்டில் வின்னராக கையை உயர்த்தி பிடித்து அறிவித்தார். ஆனால், அந்த சீசன் பிக்பாஸ் பார்த்த பலருக்கும் அது பலத்த ஏமாற்றமாக தான் அமைந்தது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதே தெரியாமல், அம்மணி மிக அமைதியாக இருந்தார். எந்த வம்பு சண்டைகளிலும் பங்கேற்கவில்லை. எல்லா சண்டை சச்சரவுகளிலும் ஒதுங்கியே காணப்பட்டார்.
#image_titleஇதை கமல்ஹாசன் உள்ளிட்ட மற்றவர்கள் சுட்டிக்காட்டிய போது, இதுதான் என் இயல்பு, இப்படித்தான் இருக்க முடியும், என்று ரித்விகா கூறினார். கடைசியில் அவருக்கே வின்னர் டைட்டில் கிடைத்தது.இவரைப்போலவே, கடந்த பிக்பாஸ் 2021, 5வது சீசனில் மிக்சர் பார்ட்டியாக, வீட்டுக்குள் சும்மாவே இருந்து, வெறும் சினிமா காமெடி பேசி டைட்டில் வின்னர் பரிசை வென்றவர் ராஜூ என்பது குறிப்பிடத்தக்கது.
ரித்விகா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பதால், அவ்வப்போது தனது படங்களை அப்டேட் செய்கிறார். அம்மணியின் அழகான படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.