ஆப்பிள் ஸ்டோர்:உலகிலேயே தொழில்நுட்ப சாதனங்களுக்கு தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்த ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இளைஞர்களின் கனவு சாம்ராஜ்யமாக திகழக்கூடிய இந்த ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவில் தனது நேரடி சில்லரை நிறுவனத்தை அமைக்க உள்ளது.
மேலும் இதன் தற்போதைய அதிகாரப்பூர்வமான சில்லறை விற்பனை கடை நம் மும்பையில் துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையானது பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள அம்பானியின் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடையின் திறப்பு விழாவில் ஆப்பிள் தலைமை நிர்வாகி கலந்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இந்திய இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கக்கூடிய இந்த கடையானது நிச்சயம் அவர்களுக்கு தேவையானதை வாரி வழங்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
apple storeஇந்த ஆப்பிள் கடையில் ஆப்பிள் சர்வீஸ்க்கு உரிய அத்துணை அம்சங்களும் பொருந்தி இருக்கும். அது மட்டுமல்லாமல் அண்மையில் வெளிவந்த ஐபோன் 14, ஐ பேட் ,ஏர்போர்ட், மேக்ஸ் புக், ஆப்பிள் வாட்ச், ஹோம் போட் மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சிகள் என அனைத்து பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஆப்பிள் சாதனங்களின் விலை சற்று சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடையை தற்போது ஆப்பிள் பி கே சி என்று அழைக்கிறார்கள். இந்தக் கடையானது சுமார் 20000 சதுர அடிகள் அமைந்துள்ளது.
மேலும் இருவதற்கும் மேற்பட்ட மொழிகளை பேசக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
apple storeஇந்தக் கடையின் வாடகை மட்டும் 42 லட்சம் ரூபாயாக உள்ளது. ஸ்டோரின் வருவாயில் இரண்டு சதவீத தொகையும் இவர்கள் செலுத்த வேண்டும். தற்போது ஆப்பிள் சாதனங்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.