“வேலைவாய்ப்பு வரும் 29 ஆம் தேதி நெல்லை பெண்கள் மிஸ் பண்ணாமல் போங்க..! – வேலைய அள்ளுங்க..!

திருநெல்வேலியில் இருக்கும் பெண்களுக்கு வரும் 29ஆம் தேதி தனியார் துறை நடத்தக்கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு உங்களது தகுதிக்கு ஏற்ப வேலையை நீங்கள் பெற்றுவிடலாம்.

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் வரும் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் பாளையம் கோட்டையில் இருக்கும் சாரா டக்கர் மகளிர் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

job fair

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளார்கள்.

மேலும் இதில் டாட்டா பவர் ரெனிவபில் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி சோலார் நிறுவனமும் பங்கு பெற உள்ளது. இந்த நிறுவனமானது கங்கைகொண்டான் புரத்தில் அமைந்துள்ளது.

job fair

 மேலும் நீண்ட நிறுவனம் இந்த முகாமில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்யக்கூடிய நிலையில் உள்ளதால் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.

இதில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடி, பாலிடெக்னிக், என்ஜினியரிங் முடித்த பெண்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளும் இதில் கலந்து கொள்ளலாம்.

job fair

வேலை வாய்ப்புகள் கலந்து கொள்ள விருப்பம் இருக்கக்கூடிய பெண்கள் தங்களது விபரங்களை http://suri.li/gllsy இந்த இணையதளத்தில் பதிவிட்டு பயனடையலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …