கீர்த்தி சுரேஷ்,(Keerthy Suresh) பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) இருவருமே பிரபலமான நடிகைகள். இப்போது, இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர். பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாகவே சென்று வருகின்றனர்.
தை பொங்கல் பண்டிகை அன்று, இருவரும் புதுப்பானையில் பொங்கலிட்ட காட்சிகள், புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலானது. பிறகு, சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் இருவரும் அருகருகே அமர்ந்து, விதவிதமான தோசைகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட வீடியோவும், புகைப்படங்களும் வைரலானது.
அதற்கு பிறகும், பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகவே தென்படுவது ரசிகர்களிடையே பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லியோ படத்தின் இணைத் தயாரிப்பாளரான ஜெகதிஷ் ப்ளிஸ் தி ரூட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில், ஜெகதீஷ் ப்ளஸ் உடன் கீர்த்தி சுரேஷூம், பிரியங்கா மோகனும் இருபுறமும் அவருக்கு ஜோடியாக நின்று, போட்டோ எடுத்துள்ளனர். அவர்களது நட்பை, ஜெகதிஷ் ப்ளஸ் பாராட்டியுள்ளார்.
தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என்ற படங்களில், கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் கீர்த்தி சுரேஷூம், பிரியங்கா மோகனும் ஒன்றாகவே பல இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.
சினிமா உலகத்தை பொருத்தவரை, நடிகர் நடிகையருக்குள் தொழில் போட்டி அதிகம். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தொழிலில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதே நோக்கம்.
ரஜினி –கமல் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்றாலும், படத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாகவே இருக்கின்றனர். இதை இருவரும் பல மேடைகளில், வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.
ஆனால், மற்றவர்களை பொருத்தவரை இந்த நட்பை, அவர்கள் வெளிப்படையாக காட்டிக்கொள்வது இல்லை. சில படங்களில், ஒன்றாக நடித்தாலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்த நட்பை அவர்கள் தொடர்வது இல்லை.
பொது நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தாலும், ஹாய் சொல்லி நலம் விசாரித்து, சென்றுவிடுகின்றனர். நடிகர்கள் நிலை இப்படி என்றால், நடிகையர் நிலை இன்னும் படுமோசமாக உள்ளது. இப்போதைய நடிகைகளில் பலரும், சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் போட்டியாளர்களாகவே இருக்கின்றனர். உதாரணமாக நயன்தாரா– த்ரிஷாவை சொல்ல முடியும்.
சிறந்த நடிகைகளாக இருந்தும் ஒருவரை ஒருவர் எப்போதும் பாராட்டிக் கொண்டதே இல்லை. அவர்கள், ஒருவருக்கு ஒருவர் பெயரை கூட சொல்லிக்கொள்வது இல்லை.
ஆனால், முன்னணி நாயகிகளாக கோலிவுட்டில் வலம் வரும் இளம் நடிகைகள் கீர்த்தி – பிரியங்கா இருவரும் இணை பிரியாத தோழிகளாக, மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிகாயிதம் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன்தான், கேப்டன் மில்லர் படத்தை இயக்குகிறார். ஒருவேளை, அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகனுடன் இணைந்து நடிப்பதால்தான், இப்படி இருவரும் நெருங்கிய தோழிகளாக வலம் வருகிறார்களா என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
போட்டி நிறைந்த கோலிவுட் சினிமாவில், இரண்டு இளம் நடிகைகள் இப்படி தோள் மீது கைபோட்டுக் கொண்டு ஜோடியாக சுற்றித்திரிவதை நம்ப முடியவில்லையே, என ரசிகர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.