மீண்டும் 7 ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகும் என்று தற்சமயம் செல்வராகவன் ஒரு பத்திரிக்கையாளர் நிறுவனங்களில் பேட்டி அளித்துள்ளார்.
முன்னதாக செல்வராகவன் ஜி ரெயின்போ காலனி காதலை முன்னிலைப்படுத்தி ஒரு எதார்த்தமான நடுத்தர குடும்ப மக்களை மையப்படுத்தி திரைப்படத்தை எடுத்திருந்தார்.
இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மேலும் இப்படியான படங்களை மென்மேலும் எடுக்க வேண்டும் என்று நிறைய பேர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் படம் எடுத்து 22 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் அந்த படம் தற்சமயம் பார்ட் 2 எடுக்கப் போவதாக இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
அதில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் மேலும் ரவி கிருஷ்ணா அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று உறுதி அளித்துள்ளார்.
Image source: googleஇந்த படம் இளைஞர்களின் வாழ்வியலை வெகுவாக கூறியிருந்தது மேலும் இந்த படம் ஜூன் மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அவர் பேட்டி ஒன்றில் அளித்துள்ளார்.
இந்த கதை தொடர்பான நிறைய விஷயங்களை தற்சமயம் சேகரித்து வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
Image source: googleமேலும் ரவி கிருஷ்ணா இந்த படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையும் குறைத்து வருவதாக கூறியிருக்கிறார் எப்படியும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.