பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது குடும்ப குத்துவிளக்கு தோற்றம், எல்லா படங்களுக்கும் பொருந்தாது என்பதுதான்.
இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இவரது கணவர் பெயர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர்.
நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது, தனது பெற்றோருடன் ரக்சிதா வசித்து வருகிறார்.
சினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற வகையில், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்
ரக்சிதா, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். குறிப்பாக, மாடல் ஆடைகளை காட்டிலும், ரக்சிதா முக அழகு, உடல்வாகு தோற்றத்துக்கு புடவை அம்சமாக அமைகிறது. அந்த வகையில், புடவை கட்டிய அழகு புயலாக, இன்ஸ்டாகிராமில் காட்சியளிக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன.
ஆனால், அவ்வப்போது மாடர்ன் டிரஸ்களிலும் அம்மணி போட்டோஸ் அப்டேட் செய்கிறார். இப்போது, இலங்கையில் உள்ள கொழும்புவுக்கு சென்றிருக்கும் ரக்சிதா, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து, ஸம்மர் விடுமுறையை கழித்து வருகிறார்.
கடற்கரையோரம் ரயில் தண்டவாளமும், வாகனங்கள் செல்லும் ரோடுகளுக்கு அருகில், இவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறையில் இருந்து, கடற்கரையை, ரோட்டில் செல்லும் வாகனங்களை ரசிக்கிறார். இவர் அமைதியாக, தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிற, ஒலிக்கிற போனை இவர் எடுத்து பேசாததால், ரக்சிதா பிஸியாக இருப்பதாக வரும் ஒலியை, ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார்.
அதாவது, அவர் தனியறையில் ஓய்வாக இருந்தாலும், அவரது மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருப்பதால், அவர் ஓய்வாக இருந்தாலும், அவரது எண்ணங்கள் பிஸியாகவே இருக்கின்றன என்ற சிம்பாலிக்கை இதில் வெளிப்படுத்துகிறார்.
கணவரை பிரிந்து வாழும் ரக்சிதா, மீண்டும் கணவருடன் சேருவாரா, மாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. சிங்கிளாக இருக்கும் பெண்கள், தாங்கள் விரும்பினால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என, கோர்ட் கூறியதை ரக்சிதா, சமீபத்தில் தனது ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார்.
அதன்படி, அவர் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்க ஆதரவு தெரிவித்ததால், நிச்சயம் அவர் மீண்டும் தனது கணவருடன் சேர மாட்டார் என்பதை சூசகமாக தெரிவித்ததாகவே, ரசிகர்கள் கருதுகின்றனர். இப்போது, ஓட்டல் தனியறையில் கூட தனது எதிர்காலம் குறித்த சிந்தனையில்தான், ரக்சிதா காணப்படுவது போல் தெரிகிறது.