ரச்சிதா மகாலட்சுமி,(Rachitha Mahalakshmi) பார்த்தவுடன் பிடித்துப்போகும் ஒரு அழகான நடிகை. சிலருக்கு மட்டுமே, இப்படியான சர்வ லட்சணம் பொருந்திய திருத்தமான அழகு அமைகிறது.
ஆனால், அழகான பல பேருக்கு மண வாழ்க்கை மட்டும், சரியாக அமைவதில்லை. இவரும், இப்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது ரசிகர்களின் கேள்வி, மீண்டும் கணவருடன் ரச்சிதா இணைவாரா, மாட்டாரா என்பதுதான். எனினும் ரச்சிதாவின் போக்கு, அவரது புகைப்படங்கள், ஸ்டேட்டஸ் போன்றவற்றை கவனிக்கும்போது, அவர் முரட்டு சிங்கிள் என்ற பாதையை தேர்வு செய்ய, அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் ரச்சிதா நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்து போனதால், சிலர் இவரை மீனாட்சி என்றும் அழைப்பதுண்டு.
Rachitha Mahalakshmiஇளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
பெங்களூருவை சேர்ந்த ரச்சிதா, ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தார். அதன்பிறகு, சினிமா துறையில் ஆர்வம் காட்டினார். அதனால் சில படங்களில் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Rachitha Mahalakshmiதமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், பெயர் சொல்லும்படியான கேரக்டர் எதுவும், ரச்சிதாவுக்கு அமையவில்லை. அதனால், முன்னணி நடிகையர் வரிசைக்கு ரச்சிதாவால், முன்னேற முடியவில்லை.
பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
Rachitha Mahalakshmiஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது குடும்பப் பாங்கான தோற்றம், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற முடியாமல் தடுத்துவிட்டது.
ரச்சிதாவின் கணவர் பெயர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர். நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது, தனது பெற்றோருடன் ரச்சிதா வசித்து வருகிறார்.
Rachitha Mahalakshmiசினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம், இன்னும் பலதரப்பு மக்களிடமும் ரச்சிதா அறிமுகம் வாய்ப்பு கிடைத்தது.
Rachitha Mahalakshmiஏனெனில், சீரியல் பார்க்காத பலரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களாக உள்ளனர். அதனால், ரச்சிதாவின் அழகை பார்த்து, அசந்துபோன பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும், இப்போது ரச்சிதாவின் ரசிகர்களாகி விட்டனர்.
Rachitha Mahalakshmiசமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். இப்போது, கவுன் அணிந்தபடி இருக்கும் தனது புகைப்படங்களை ரச்சிதா, அப்டேட் செய்திருக்கிறார். கதவில் சாய்ந்தபடியும், கையில் பூங்கொத்தை ஏந்தியபடியும் பல விதங்களில் போஸ் தந்து சிரித்திருக்கிறார்.
Rachitha Mahalakshmiரச்சிதாவின் அழகிய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அசந்து போய் தங்களது லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.