ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan )தாய் எட்டடி வாழ்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற கருத்தை தூக்கி குப்பையில் போடக்கூடிய அளவிற்கு தன் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பெண் பிள்ளையாக அவருடைய நடிப்புத் துறையில் மட்டுமல்லாமல் பர்சனல் வாழ்க்கையிலும் இருக்கிறார்.
இவர் உலகநாயகன் கமலஹாசன் பெற்றெடுத்த மூத்த பிள்ளை. தந்தையைப் போலவே அபார திறமையை கொண்டிருக்கும் இவர் சினிமா துறையில் கதாநாயகியாக வலம் வருவதோடு பன்முக திறமையை கொண்டவர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் அக்கட தேசத்தில் கிடைத்த பெயரும் புகழும் இவருக்கு தமிழில் கிடைக்கவில்லை என்பது சற்று வருத்தமான விஷயமே.
மேலும் தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் ஹீரோக்களுக்கு ஹீரோயினியாக நடித்த இவர் தந்தையைப் போலவே லிவிங் டுகெதர் வாழ்க்கையை பின்பற்றி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் பழகிய நடிகர்களுடன் எல்லாம் டேட்டிங் செய்து உள்ளதாக ஓப்பனாக தெரிவித்திருக்கிறார். இவரது தந்தையும் நடிகையான கௌதமியோடு திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளாக லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்து பின்னர் அவரை வேண்டாம் என கழட்டி விட்டவர்.
Shruti Haasanமேலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது காதலனோடு தனியாக வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது தன் காதலனோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கிலியை ஏற்படுத்திவிடுவார்.
இதனை அடுத்து அண்மையில் இவர் அளித்த பேட்டியில் திருமணம் என்றாலே மனதில் ஒரு படபடப்பு ஏற்படுகிறது. ஆரம்ப காலங்களில் திருமணம் என்பது சிறப்பாக இருக்கும் போகப் போக அது வேறு விதமாக மாறும் அதை கண்கூடாக இவர் பார்த்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Shruti Haasanஎனவே திருமணத்தில் நாட்டம் இல்லாத காரணத்தால் தனது காதலருடன் இவர் தனித்து திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருகிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் என்ற வாக்கியங்களை போட்டு அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.
எது எப்படியோ பலருக்கும் உதாரணமாக திகழக்கூடிய இவரை போன்ற பிரபலங்கள் சமுதாயத்தில் சீர்கேடுகளை ஏற்படுத்தாமல் இருக்க திருமணம் எனும் பந்தத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் நன்மையாக இருக்கும் என்பதை வயதில் மூத்தவர்கள் சுருதிஹாசனுக்கு எப்போது எடுத்துரைப்பார்கள் என்று காத்திருக்கிறார்கள்.