எஸ்தர் அனில் ( Esther Anil ) தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த நல்லவன் என்ற படத்தில், எஸ்தர் அனில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, சினிமாவில் அறிமுகமானார்.
இவருக்கு தற்போது, 22 வயது ஆகிறது. இவரது சொந்த ஊர் கேரளா மாநிலம், வயநாடு.எஸ்தர் அனில், நடிகை மட்டுமல்ல, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது பெற்றோர் அனில் ஆபிரகாம் – மஞ்சு.
கடந்த 2016ம் ஆண்டில், சிறந்த குழந்தை கலைஞர் என்பதற்கான, கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதும் எஸ்தர் அனில் பெற்றிருக்கிறார்.
Esther Anilகடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷியம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த த்ரிஷியம் 2 ஆகிய படங்களில் அனுமோல் ஜார்ஜ் அதாவது அனு என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.
மோகன்லால் – மீனா நடித்த இப்படம், மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் த்ரிஷியம் 3 என்ற மூன்றாவது படம், தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மோகன்லால்– மீனா நடித்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
Esther Anilகடந்த 2020ம் ஆண்டில், கனவு புனைவு படமான ‘ஊலூ’ என்ற படத்தில் ‘ஊலூ’ என்ற கேரக்டரில் எஸ்தர் அனில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில், மோகன்லால் – மீனா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமான த்ரிஷியம் படம், தமிழில் ரீமேக் செய்து எடுக்கப்பட்டது. கமல்–கவுதமி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில், பாபநாசம் என்ற பெயரில் தமிழில் வெளியானது. சுயம்புலிங்கம் – ராணி என்ற கேரக்டர்களில் நடித்த கமல் –கவுதமிக்கு இரண்டு மகள்கள். நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில்.
ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படத்தில் ஆஷா சரத் போலீஸ் அதிகாரியாகவும், அருள்தாஸ், கலாபவன் மணி, ஆனந்த் மகாதேவன், இளவரசு, எம்எஸ் பாஸ்கர், சார்லி, அலோ கந்தசாமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
உள்ளூர் கேபிள் கனெக்ஷன் நிறுவனம் நடத்தும் கமல், தீவிர சினிமா பிரியர். சந்தர்ப்ப சூழலால், தனது வீட்டுக்குள் நடந்த ஒரு கொலையை மறைக்க, அவர் செய்யும் தகிடுதத்தங்களே படத்தின் விறுவிறுப்பு.
கொலை செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகனை, போலீஸ் ஸ்டேஷனிலேயே புதைத்து வைத்துக்கொண்டு கமல் இறுதியில் தப்பிக்கும் காட்சி, படத்தின் உச்சக்கட்ட மர்மம். இதில், கமல்ஹாசனின் இளைய மகள், அதாவது சிறுமியாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.
Esther Anilஇப்போது, வளர்ந்து பெரிய பெண்ணாகி, நாயகியாக நடிக்க துவங்கி இருக்கிறார். குறளி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தெலுங்கில் ஜோஹார் என்ற படத்தில், முக்கிய கேரக்டரில், நடித்து வருகிறார்.சிறுமியாக இருந்த எஸ்தர் அனில், இப்போது சமூக வலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார்.
அதுவும், தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை வாய்பிளக்க வைக்கிறார். சின்ன பெண்ணாக இருந்த எஸ்தர் அனில், இன்று கவர்ச்சி நாயகியாக தனது அந்தரங்க உடல்பாகங்கள் தெரியும்படியான படங்களை பதிவிட்டு, ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறார். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.