ரேகா ( Rekha ) இவர் 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்துள்ளார். இவர் இவர் 90 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக தமிழ் சினிமா மற்றும் மலையாளம் தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளையும் கலக்கியவர்.
இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது இந்த படத்தில் இவர் டீச்சர் கேரக்டரில் நடித்திருந்தார் இது இப்போது வரை டீச்சர் என்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த படத்தில் கிடைத்த நல்ல அறிமுகத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தார்.
இவர் அடுத்தடுத்து புன்னகை மன்னன் என் பொண்ணு குட்டி அம்மாவுக்கு எங்க ஊரு பாட்டுக்காரன் ராசாவே உன்னை நம்பி பாட்டுக்கு நான் அடிமை குணா வைதேகி கல்யாணம் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து. அதனைத் தொடர்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அம்மா கேரக்டர்களின் நடித்து வரும் இவர் தனது தந்தை மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு தானே சமாதி கட்டி வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணமென்றால், தன்னுடைய தந்தை மீது அளப்பரிய பாசம் கொண்டிருக்கிறாராம் ரேகா.
எனவே, தனது தந்தையின் சமாதி அருகே இவருக்கென ஒரு சமாதியை கட்டி வைத்துள்ளாராம். நான் இறந்த பிறகு தன் தந்தை கல்லறை அருகே உள்ள இந்த கல்லறையில் அடக்கம் செய்யுமாறும் கூறியுள்ளாராம்.
இவர் செய்த இந்த காரியம் ரசிகர்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்கு, சுடுகாட்டுக்கு கூட ரிசர்வேஷன் கொண்டு வந்துடீங்களா..? வெளங்கும் டா.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.