லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!

லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!

நடிகர் முரளியின் திரைப்பட தெரியரிலே மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்ட படம் தான் “சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படம்.

இந்த திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்திருந்தது.

சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா:

இத்திரைப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா. நடிகை ஆக வேண்டும் என்ற ஒரு ஆசையில் ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி இடம்பெயர்ந்து வந்த நடிகை ராதா சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு முகம் அறியப்பட்டார்.

லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் வெளியான பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் வி தங்கராஜ் நடிகை ராதா தன்னுடன் படுத்தால் தனது அடுத்த படத்தில் உனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுப்பேன் என கூறியதாக ராதா குற்றம் சாட்டியிருந்தார் .

இது அப்போது ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி சர்ச்சைக்குரிய நடிகையாக ராதா அப்போதே பார்க்கப்பட்டு வந்தார்.

மேலும், இவர் கார்த்திக் உடன் இணைந்து கேம், சத்யராஜ் உடன் அடாவடி, நடிகர் கரணுடன் காத்தவராயன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடிகை ராதாவின் திரைப்படங்கள்:

இதனிடையே நடிகை ராதா திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்ற தொழிலதிபருடன் திருமணம் செய்யாமலே கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருந்தார்.

லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!

இந்நிலையில் நடிகை ராதாவின் வாழ்க்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிகப் பெரிய சம்பவம் ஒன்று நேர்ந்து அவரது சினிமா கெரியரையும், சொந்த வாழ்க்கையும் சீர்குலைத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.

ஆம், நடிகை ராதாவின் வாழ்க்கையில் 11 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருமணம் செய்யாமல் 6 வருடம் உறவு:

சரியாக கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் எனக் கூறிக் கொண்டு திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்த “பைசூல்” என்பவர் மீது நடிகை ராதா அதிரடியான புகார் ஒன்றை தெரிவிக்கிறார்.

அதாவது, 6 ஆறு வருடம் என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ரூ. 50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டார் என பைசூல் மீது பரபரப்பான புகார் ஒன்றை கூறுகிறார் ராதா.

இந்த வழக்கை விசாரித்து வந்த வடபழனி அனைத்து மகளிர் போலீசாரிடம் பைசூல் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகுகிறார்.

ஆனால், 3 முறை முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதன்பின் அவர் விசாரணைக்கும் வராததால் அவரை கைது செய்ய போலீசார் அதிரடியாக தேடி வருகிறார்கள்.

ஆனால், போலீசார் பைசூலை கைது செய்யாமல் சென்று விடுகிறார்கள். காரணம் போலீஸ் அதிகாரிகள் பைசூலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என அப்போது நடிகை ராதா பரபரப்பாக பேட்டி கூறி காவல் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தினார்.

லாட்ஜில் வைத்து அடித்து துன்புறுத்தி அதை செய்ய சொன்னார்.. சுந்தரா ட்ராவல்ஸ் ஹீரோயின் கண்ணீர்..!

கள்ளத்தொடர்பில் ரூ. 50 பணம்…. நகை மோசடி

அதன் பின்னர் திடீரென வடபழனி போலீஸ் நிலையத்திற்கு சென்ற நடிகை ராதா… தான் கொடுத்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறி தன்னுடைய கணவரான தொழிலதிபர் பைசூளுடன் வாழ போவதாக அறிவித்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இதனால்,. ராதாவின் வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது? அவர் மனநிலை ஏதேனும் பாதிக்கப்பட்டு விட்டாரா? என்றெல்லாம் கூறி வந்தனர்.

மேலும் இப்படி பொய் புகார் கூறி தொழிலதிபர் பைசூலாய் அவமானப்படுத்திய ராதா மீது ஏதேனும் வழக்கு தொடரலாமா? என்று கூட ஆலோசித்து வந்ததாக செய்திகள் வெளியானது.

அதை எடுத்து மீண்டும் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை நான் வாபஸ் பெறவில்லை.

லாட்ஜில் அடித்து சித்ரவதை:

அவர் என்னை கடத்தி சென்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சிறையில் வைத்து என்னை அடித்து துன்புறுத்தி மிரட்டியதால் தான் நான் அந்த புகாரை வாபஸ் பெற்றேன்.

எனவே என்னை சித்திரவதை செய்த பைசூல் மீது மீண்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என கூறி இருந்தார்.

இப்படி அடுத்தடுத்து நடிகை ராதா கொடுத்த புகார்களை கேட்டு போலீஸார் குழப்பமடைந்துவிட்டனர்.

இப்படியாக கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் நடிகை ராதாவின் வாழ்க்கையில் பெரும் புயல் காற்றே வீசியது.

அந்த பெரும் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த நடிகை ராதா பின்னர் சீரியல்களில் தலை காட்ட ஆரம்பித்து பாரதி கண்ணம்மா 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.