விருமன் படத்தில் பட்டையை கிளப்பிய அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
தனது முதல் படத்திலேயே கிராமத்து கேரக்டரை பக்காவாக பின்னி பேடலடித்த அதிதி சங்கர் சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக படக்குழு கூறியுள்ளது.
மேலும் பிரின்ஸ் படம் அடி வாங்கியதற்கு காரணம் அதில் காமெடி இல்லாது தான். ஆனால் அந்த குறையை இந்த படம் ஏற்படுத்தாது. காமெடி ட்ராக் இதில் மிகவும் நன்றாக வந்துள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.
இதனை எடுத்து பொங்கலை முன்னிட்டு இந்த பட குழுவினர் ஜாலியாக பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அப்போது அவர்களுடன் அதிதியும் இருக்கிறார். அந்த சமயத்தில் அதிதி அடித்த சேட்டைகள் அனைத்தும் வீடியோவில் நீங்கள் பார்த்தால் அவர்களின் சேட்டை இன்னும் குறையவில்லை அப்படியே தான் இருக்கிறது என்று உணர்வீர்கள்.
அட நம்ம அதிதியால் மட்டும் எப்படி இப்படி என்று ரசிகைகள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். இதை எடுத்து பட குழுவானது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இதோடு மட்டுமல்லாமல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிதி சங்கரும் தன்னுடைய ரோலை பக்காவாக செய்திருக்கிறார்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!🎋#Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @ShanthiTalkies @Mee_Sunil @DirectorMysskin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @saregamasouth @LokeshJey @DoneChannel1 @UrsVamsiShekar pic.twitter.com/PuiIXzLyzq
— Shanthi Talkies (@ShanthiTalkies) January 15, 2023
இதனால் ரசிகர்கள் அனைவரும் விரும்பக்கூடிய கேரக்டராக இந்த இரண்டு கேரக்டர்களோடும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் அதிதி சங்கர் சின்ன பிள்ளையை போல எல்லோரிடமும் பழகுவதும் கடி ஜோக்குகளை சொல்லுவதும் இயல்பாக இருப்பதால் அவரை அனைவரும் விரும்புகிறார்கள்.எந்த பாரபட்சம் இல்லாமல் நடிகை என்ற அந்தஸ்து பார்க்காமல் அனைவரிடமும் சகஜமாக பேசும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்து இருப்பதோடு அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.