“உங்க சிந்தனையை தூண்டும் ஆன்மீக கருத்துக்கள்..!” – படித்துப் பாருங்க..!

நம்மிடையே காணப்படுகின்ற எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதோடு உங்களின் நல்ல சிந்தனைக்கு வடிகால் அமைத்துக் கொடுக்க எந்த பதிவு நிச்சயம் உதவி செய்யும்.

இன்றைய பதிவில் நீங்கள் மிகச் சிறந்த ஆன்மீக கருத்துக்களை படிக்கலாம். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி ஆவதோடு நேர்மறை ஆற்றல் அதிகரித்து எதிலும் நம்பிக்கையோடு செயல்படுவீர்கள்.

உங்கள் சிந்தனையை தூண்டும் ஆன்மீக கருத்துக்கள்

எந்த ஒரு மனிதனும் நேற்று நடந்ததை மாற்ற முடியாது. நாளை நடப்பதை தடுக்க முடியாது. இன்றைய பொழுதில் எந்த கனத்துக்காக நீங்கள் வாழ வேண்டும். அதுதான் உங்கள் துன்பங்களுக்கு ஒரே தீர்வு என்று புத்தர் கூறியிருக்கிறார்.

சத்குருவின் கூற்றுப்படி ஒருவரை யார் கைவிட்டாலும், அவர் நம்பும் ஆன்மீகம் அவரை ஒரு நாளும் கைவிடாது. எனவே இறை வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவது உங்கள் ஆரோக்கியம்,முன்னேற்றத்திற்கு நல்லது.

நீங்கள் யாரையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.அப்படி இருந்தால் அது உங்கள் நிம்மதியை கெடுத்து விடும். காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் எனவே காத்திருங்கள்.

ஒருவரின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்கு பலன் தராது என்று அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார்.

ஒரு விளக்கை கொண்டு மற்றொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எந்த இழப்பும் ஏற்படுவதில்லை. அந்த இடத்தில் இரண்டு விளக்கும் சேர்ந்து ஒளியை இருமடங்காக்கிவிடும். எனவே நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவ வேண்டும். அதனால் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

படித்தவர்களிடம் பக்குவம் பற்றி பேசக்கூடாது, பசித்தவனிடம் தத்துவம் பற்றி பேசக்கூடாது. மகான் போல நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்.

இழந்ததை நினைத்து வருந்தினால், இருப்பதையும் இழந்து விடுவாய், நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததும் உன்னிடம் வந்து சேரும்.

மான, அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் நிலைகுலைந்து போக செய்யும். காலச் சூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள் செய்யும். காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர்கள், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புக்கள் இவையெல்லாம் மனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்.

இது போன்ற போராட்டங்களை பார்த்து நீங்கள் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் அதை எதிர்கொள்ள வேண்டும். அப்படி யார் எதிர்கொள்கிறார்களோ, அவர்களே மிகச்சிறந்த பராக்கிரம் பொருந்திய வெற்றியாளர்களாக மாறுவார், என்று ஸ்ரீ பகவான் கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …