Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ச்சீ.. கேவலம்.. இணையத்தில் பரவிய ஆபாச வீடியோ..! – பிக்பாஸ் அபிராமி பதில்..!

திரைத் துறையில் வேலை செய்யக்கூடிய நடிகைகளின் நிலை தற்போது டீப் ஃபேக் வீடியோக்களின் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை அபிராமி இந்த டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

டீப் ஃபேக்..

மனிதனின் அபரிவிதமான மூளையால் அதி வேகமாக தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடைந்து உச்சகட்டத்தை ஏட்டி இருக்கக்கூடிய சமயத்தில் வேண்டாத விஷயத்திற்காக ஆண்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிலர் பெண்களை வல்கராக சித்தரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தானாவின் டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வெளி வந்து பல்வேறு விதமான சர்ச்சைகளையும் கிளப்பியதோடு மட்டுமல்லாமல் மிகப் பிரபலமான நடிகர்களும் இந்த வீடியோக்களுக்கு கண்டனங்களை தெரிவித்ததோடு இதுபோன்ற நிலையை உடனடியாக தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்கள்.

இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோவில் அரைகுறை ஆடையோடு பெண்களை சித்தரிப்பதை அடுத்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக கூடிய அவர்கள் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் தவித்து வருகிறார்கள்.

மேலும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களை ஐபிசி பிரிவின்படி 465 மற்றும் 469 சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் அது மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளான 66 சி 66 இ போன்றவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளது.

இந்த நிலை வரக்கூடாது..

இந்த சட்ட திட்டத்தின்படி தான் ராஷ்மிகா மந்தானாவின் டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஈ மணி நவீன் என்பவரை போலீசார் விசாரணை செய்தார்கள்.

ராஷ்மிகாவைப் போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை அபிராமி இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோஸ் தற்போது சிக்கி இருப்பதோடு தனது வேதனையை வெளிப்படுத்தி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேலும் இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்று கூறியதோடு அண்மைக்காலமாக இந்த கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபமாக மாறி வரக்கூடிய சூழலில் இது பற்றி அனைவரும் கவலை கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குற்றவாளியை விட அந்த குற்றத்தை தூண்டுபவன் எவ்வளவு மிகப்பெரிய குற்றவாளியோ அதுபோலத்தான் இந்த வீடியோவை உருவாக்குபவர்களை விட பகிர்ந்து மகிழ்ச்சி அடைபவர்கள் மிகப்பெரிய குற்றவாளியாக கருதப்பட்டு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும்.

தைரியமான பெண் என்பதால் இதைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட யாரையும் நான் சும்மா விடமாட்டேன் போலீசில் புகார் அளிக்க போகிறேன் என்பதை ஆணித்தனமாக பேசியிருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக நிற்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களை உடனடியாக சமூகத்தில் இருந்து வேரோடு கலைய வேண்டும் என்பதில் அதிக அளவு ஆர்வம் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

எனவே இது போன்ற செயல்களுக்கு யாரும் உடனடியாக இருக்காமல் பெண்களை மதிக்க கூடிய பட்சத்தில் தான் இது போன்ற தவறுகள் தடுக்கப்பட்டு பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என கூறலாம்.

Continue Reading
Click to comment

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version