கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்..! ரசிகர்கள் ஷாக்..!

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்..! ரசிகர்கள் ஷாக்..!

கடந்து போன 2023 ஆம் ஆண்டில் கலையுலகை சேர்ந்த பல கலைஞர்களை நாம் இழந்து தவித்து இருக்கிறோம். குறிப்பாக நடிகர் விஜயகாந்த் நம்மை விட்டு விண்ணுலகம் சென்றது மிகப்பெரிய துயரத்தை தமிழக மக்களுக்கு தந்தது.

இவரைப் போல பல கலைஞர்கள் கடந்த ஆண்டு நம்மை விட்டு சென்றாலும் நமது நினைவில் என்றும் வாழுவார்கள். அந்த வகையில் சீரியல்களில் சிறப்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெயர் பெற்ற சீரியல் நடிகர் அழகப்பன் மரணம் அடைந்திருக்கிறார்.

சீரியல்களில் தனது நடிப்புத் திறனை காட்டி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் அவரது நடிப்பில் வெளி வந்த கனா காணும் காலங்கள் சீரியல் இவருக்கு திரையுலகில் நல்ல அறிமுகத்தை தந்தது.

 

இந்த சின்னத்திரை சீரியல் நடிகர் கனா காணும் காலங்கள் மூலம் சீரியலில் அறிமுகம் ஆகிப் பிரபலமானார். மேலும் இந்த சீரியலில் உடற்பயிற்சி வாத்தியாராக இவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்..! ரசிகர்கள் ஷாக்..!

பள்ளி செல்லும் மாணவர்கள் இவர் உடற்பயிற்சி ஆசிரியராக அந்த சீரியலில் நடித்ததை ஒவ்வொரு நாளும் பேசுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சீரியலை பார்த்து அந்த சீரியலை வெற்றி அடைய செய்தார்கள்.

இதனை அடுத்து இவருக்கு இரட்டை வால் குருவி, தாயுமானவர் போன்ற சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த சீரியல்களிலும் பக்காவாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு சின்னத்திரையில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

 

மேலும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியல்களில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இவரது மறைவு குறித்து சின்னத்திரையில் உள்ள பலன் நட்சத்திரங்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்களும் திரையுலகினரும் இவருடைய மறைவுக்கு இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

யார் வாழ்வு, யார் கையில் இருக்கிறது என்று தெரியாமல் வாழும் நாம் எப்படி நடக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் கட்டாயமாக நல்ல மனிதர்களாக நாம் வாழலாம்.