கிசுகிசு : சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு பல வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை படாத பாடுபட்டு பிடித்தவர் இந்த நடிகர். ரசிகர்களால் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட இவர் தற்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.
ஹீரோ மட்டுமில்லாமல் துணை கதாபாத்திரங்களிலும், வில்லன் நடிகராகவும் கூட சாதித்திருக்கும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து தன்னுடைய நடிப்பை நிரூபிக்கக் கூடிய ஒருவர்.
இதன் காரணமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. ஆனால், காலம் செய்த கோலம் பாருங்கள். தற்போது இந்த நடிகர் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்று கூட தெரியாத ஒரு நிலை.
இதற்கு முக்கியமான காரணம் வேறு யாரும் கிடையாது. இவருடைய தனிப்பட்ட உதவியாளராக இருந்த 42 வயது ஆன்ட்டி தான். இது பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் கூட இருக்கும்.
இவர் தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் போய்விட்டால் கூட தற்போதும் இவர் மீது திரையுலகில் நல் மதிப்பு இருக்கின்றது. பெண்கள் விஷயத்திலும் மிகவும் நல்லவர்.
எந்த ஒரு வதந்தி சர்ச்சைகளிலும் சிக்காமல் பிரபல நடிகராக இருந்தவர். ஆனால் 42 வயதான ஒரு ஆண்டியால் தன்னுடைய சினிமா வாழ்க்கையையே தொலைத்துவிட்டார் என்றால் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் கோடம்பாக்க வாசிகள்.
பொதுவாக பிரபல நடிகர்கள் என்றாலே கதை கேட்பது கதை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை தங்களுடைய உதவியாளர்களிடம் விட்டுவிடுவார்கள். தங்களுடைய உதவியாளர்கள் தங்களுக்கு சொல்லக்கூடிய கதைகளில் எந்த கதை பிடித்தமானதாக இருக்கிறது. அந்த கதையை இயக்குனரை நேரடியாக வரவைத்து பேசுவார்கள். இதுதான் நடைமுறை.
பொதுவாக இப்படியான உதவியாளர்களிடம் கூறப்படும் அனைத்து கதைகளுமே நடிகர்களிடம் கூறப்படும். ஆனால், இந்த நடிகர் சற்று வித்தியாசமான முறையில் இதை அணுகி இருக்கிறார்.
கதை கேட்பது, கதையை தேர்வு செய்வது, சம்பளம் எவ்வளவு என பேசுவது.. என அனைத்தையும் 42 வயது ஆண்டியான அந்த உதவியாளரிடமே விட்டிருக்கிறார். இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது.
ஒரு கட்டத்தில் இந்த உதவியாளர் பணமே பிரதானம் எந்த இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் அதிக பணம் கொடுக்கிறாரோ அந்த படத்தை ஓகே செய்வது என்ற முடிவில் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
யாராவது கதை கூற வேண்டும் என்று வந்தால் அவர்களிடம் முதலில் சம்பளம் எவ்வளவு என பேசிவிட்டு யார் அதிக சம்பளம் கொடுக்கிறார்களோ அந்த படத்தின் கதையை அவரிடம் சொல்லி சம்பளம் வாங்கி இருக்கிறார் அம்மணி.
இவர் சொல்வதெல்லாம் அப்படியே செய்யக்கூடிய பூம்பூம்மாடு போல மண்டையை ஆட்டிக் கொண்டிருக்கிறார் அந்த முன்னணி நடிகர். மறுபக்கம் தன்னுடைய மார்க்கெட் சரிந்து கொண்டிருக்கிறது தான் நடித்த படங்கள் நல்ல வரவேற்பு பெறுவது கிடையாது என்ற எந்த ஒரு அறிவும் இல்லாமல் அந்த 42 வயது ஆன்ட்டியின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறார் நடிகர்.
விஷயம் விவகாரமான பிறகு தான் இவருக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த 42 வயது ஆன்ட்டியின் மடியில் சதா சர்வ காலமும் கிடந்ததால் தான் நடிகர் தன்னுடைய மார்க்கத்தை இழந்து தற்போது தன்னுடைய வங்கி இருப்பு சொத்துக்கள் பலவற்றையும் இழந்து போண்டியாகி இருக்கிறார்.
இருந்தாலும் இவை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கால் போன போக்கில் காலத்தை தள்ளிக் கொண்டு இருக்கிறாராம் அந்த நடிகர். நடிகரின் தற்போதைய நிலையை கண்ட ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன்.. யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. என்று புலம்பி வருகிறார்கள்.