Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

அந்த உறுப்பில் ஆசிட்டை கலந்து ஊத்திட்டாங்க.. நடிகை கலாரஞ்சனி வெளியட்ட பகீர் தகவல்..!

சினிமாவில் 1980 கால கட்டங்களில் சகோதரிகளாக வந்து கலக்கிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி மூவராக வந்து கலக்கியவர்கள்தான் கல்பனா, கலாரஞ்சனி மற்றும் ஊர்வசி.

இவர்கள் மூவருமே சகோதரிகள் ஆவார்கள். அவர்கள் மூவருமே பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனார் என்று கூறலாம். அதில் தற்சமயம் சினிமாவில் நடிக்காமல் மிக சீக்கிரமாகவே சினிமாவை விட்டு விலகியவர் கலாரஞ்சனி.

கலாரஞ்சனி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சினிமா வாய்ப்பு:

1981 இல் வந்த ”அன்று முதல் இன்று வரை” என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் கலாரஞ்சனி. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1998 வரையிலுமே சினிமாவில் நடித்து வந்து கொண்டிருந்தார்.

---- Advertisement ----

அதன் பிறகு பெரிதாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. 2015 இல் ஜோதிகா நடித்து வந்த 36 வயதினிலே திரைப்படத்தில் மட்டும் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கலா ரஞ்சனி.

அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாகதான் அவர் பாதியிலேயே சினிமாவை விட்டு சென்றுவிட்டார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு. இந்த நிலையில் மறைந்த நடிகை கல்பனாவின் மகளுடன் சேர்ந்து இவர் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

விலக காரணம்:

அதில் அவர் சினிமா விட்டு விலகியதற்கான முக்கிய காரணத்தை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அவர் பேச்சில் தடுமாற்றம் இருந்ததால் உங்கள் குரலுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டனர். அப்பொழுது அவர் கூறும் பொழுது சின்ன வயதில் இருந்து பாபிலோனா என்கிற பிரச்சனை எனக்கு இருந்து வந்தது.

என்னுடைய மூச்சு குழாயில் மரு ஒன்று ஏற்பட்டு அதனால் எனக்கு பேசுவதிலேயே பிரச்சனை ஏற்பட்டது. பிறகு அதுவாகவே அது சரியாகிவிட்டது. ஆனால் அதனால் இப்பொழுது எனது குரலுக்கு பிரச்சனை வரவில்லை.

சினிமாவில் நடிக்கும் பொழுது எனது வாயில் ஆசிட் விழுந்த காரணத்தினால் தான் என்னால் சரியாக பேச முடியவில்லை என்று கூறுகிறார் கலா ரஞ்சனி. அதில் அவர் கூறும் பொழுது படப்பிடிப்பில் பொதுவாக ரத்தம் கக்குவது போன்ற காட்சிகளுக்கு தேங்காய் எண்ணெயில்தான் நிறத்தை கலந்து வைப்பார்கள்.

மேக்கப் மேன் செய்த தவறு:

அப்படியே மேக் அப் மேன் ஒரு முறை கலந்து வைக்கும் பொழுது அதில் தெரியாமல் ஆசிட்டை கலந்து வைத்து விட்டார். எனக்கும் அந்த விஷயம் தெரியாமல் அதை நான் வாயில் ஊற்றி விட்டேன். அதை வாயில் ஊற்றிய உடனே எரிச்சல் ஏற்பட்டு எனது மூச்சுக் குழாயில் பிரச்சனை ஏற்பட்டது.

அதிலிருந்து எனக்கு பேசுவதிலும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அந்த மேக்கப் மேனே அதை தெரிந்து செய்யவில்லை இருந்தாலும் அது எனது வாழ்க்கையை மாற்றி விட்டது என்று கூறுகிறார் கலாரஞ்சனி.

Continue Reading

More in Actress

Trending

To Top