Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என் அம்மாவிற்கு துரோகம் செய்த துரோகி..! பாலியல் தொல்லை கொடுத்த இசை பிரபலம்..!

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பூர்ணிதா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை கல்யாணி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த நடிகையாக திகழ்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்ததை அடுத்து தனது பெயரை கல்யாணி என்று மாற்றிக் கொண்ட இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்து இருகிறார்.

என் அம்மாவிற்கு துரோகம் செய்த துரோகி..

2001 ஆம் ஆண்டு வெளி வந்த அள்ளி தந்த வானம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் ஸ்ரீ, ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் மறந்தேன் மெய் மறந்தேன் என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

---- Advertisement ----

 

இதனை அடுத்து கத்திக்கப்பல், இன்பா, இளம் புயல் போன்ற படங்களில் நடித்த அசத்தியிருக்கிறார். மேலும் திரை உலகில் இருந்து விலகியதற்கு காரணம் பாலியல் பிரச்சனை என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பாலியல் தொல்லை கொடுக்க இசை பிரபலம்..

அண்மையில் இவரது அம்மா அகால மரணம் அடைந்ததை அடுத்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கல்யாணி அது பற்றிய விஷயங்களை இணையங்களில் அதிக அளவு பகிர்ந்து இருந்தார்.

மேலும் தனது அம்மாவிற்கு துரோகம் செய்த தனது அப்பா பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஒரு டொமஸ்டிக் வயலன்ஸ் செய்யக்கூடிய நபராக இருந்ததாகவும் குடித்துவிட்டு தனது தாயை பல்வேறு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகியிருக்கிறார் என்ற தகவலை கூறியிருக்கிறார்.

எனது குடும்ப கவலைகள் அனைத்தையும் மறக்க வைக்க கூடிய தன்மையை திரை உலகம் எனக்கு தந்ததால் அதிக ஈடுபாடுடன் நடிக்க ஆரம்பித்தேன்.

அதுமட்டுமல்லாமல் எனது அம்மா கிளாசிக் டான்ஸ் என்பதால் பாலமுரளி கிருஷ்ணா குரூப்பில் இருந்த ஒரு இசை பிரபலம் என்னை molest செய்து வைத்திருந்தார்.

எட்டு வயதான குழந்தையாக இருந்த எனக்கு அது சம்பந்தமான எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் அந்த நபர் என்னை வந்து தவறான முறையில் தொடக்கூடிய விஷயங்களை அத்துமீறிய சமாச்சாரங்களை செய்திருக்கிறார்.

இந்த விஷயத்தைப் பற்றி என் தாயிடம் கூட நான் பகிர முடியாத சூழ்நிலையில் இருந்தேன். ஏனென்றால் அந்த நபரை எனது அம்மா தனது தம்பி போல கருதி இருந்தார். என் அம்மா இறப்பதற்கு முன்பு எந்த ஒரு சூழ்நிலையிலும்  இந்த விஷயத்தை அவருடன் நான் ஷேர் செய்தது கிடையாது.

 

யாருன்னு தெரிஞ்சுக்க படியுங்க..

பாலமுரளி கிருஷ்ணா குரூப்பில் இருந்த ஒரு இசை பிரபலம் molest செய்தது மூலம் மனநலம் பாதிக்கப்பட்டது போன்ற விஷயத்தை நான் தற்போது உணர்ந்து கொண்டு விட்டேன்.

அது மட்டுமல்லாமல் என் அம்மா என்னை திருமணம் செய்து கொள் என்று வேண்டிய சமயத்தில் நான் எப்போதும் அம்மா பிள்ளை என்பதால் உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன்.

இதனை அடுத்து எனக்கு திருமணம் முடிந்த பிறகு என் கணவரிடம் பேசி நான் சென்னைக்கு என் அம்மா வீட்டு அருகே குடி பெயர்ந்து வந்து விட்டேன். இந்த சூழ்நிலையில் எனது அம்மா மன அழுத்தத்தின் காரணமாக எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

மேலும் சிறு வயதில் இது போன்ற வேண்டாத அறிந்து கொள்ள முடியாத விஷயங்கள் எனக்கு நடந்ததை அடுத்து நானும் மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதில் இருந்து வெளி வந்து விட்டேன் என்று ஓபனாக பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top