என்னோட இது பெருசாக.. அந்த இயக்குனர் தான் காரணம்.. ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!

தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ராசி மந்த்ரா 1980 ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படமானது 1996-ஆம் ஆண்டு வெளிவந்தது.

நடிகை ராசி மந்த்ரா..

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியில் க்ராப்தர் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 1997-ஆம் ஆண்டு தமிழில் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான நடிகையானார்.

இதனை அடுத்து இவர் கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம் கண்ணன் வருவான், குபேரன், சிலம்பாட்டம், டபுள்ஸ், ராஜா, ஆளுக்கு ஒரு ஆசை, ஒன்பதுல குரு வாலு போன்ற படங்களில், நடித்து ரசிகர்களின் மனதை தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

---- Advertisement ----

மேலும் பிரியம் படத்தில் நடிக்கும் போது அருண் விஜய் மந்த்ரா இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் எழுந்ததை அடுத்து அந்த காதலுக்கு அருண் விஜயின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற கிசுகிசுக்கள் அன்று வெளிவந்தது.

இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கதைக்குத் தேவைப்படக்கூடிய பட்சத்தில் எல்லை மீறிய காட்சிகளில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது.

என்னோட அது பெருசாக..

இந்நிலையில் ஒரு காலத்தில் திரை உலகில் மினிக்கிட்ட இவர் தற்போது திரையுலகத்தில் பக்கத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு காணாமல் போனதற்கு காரணமே ஒரு இயக்குனர் என்ற பேரிடியை வெளிப்படுத்தியதோடு தனது சினிமா கேரியர் இப்படி தடம் மாறி போக இவர் தான் காரணம் என்ற வேதனையை சொல்லி இருக்கிறார்.

என்ன தான் தமிழில் இவர் 90களில் முன்னணியில் இருந்த நடிகைகளோடு நடித்திருந்தாலும் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து விட முடியாமல் கடுமையான போராட்டங்களை சந்தித்தார்.

இதனை அடுத்து தெலுங்கு பக்கம் சென்று நடித்த அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து 2005-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீமினியை திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்து விட்டார்.

குழந்தை பிறந்த பிறகு சில படங்களில் தலைக்காட்டிய இவர் சின்னத்திரையில் அம்மா, அக்கா, மாமியார் எனக்கு கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளை தவறவிடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். 

குறிப்பாக தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வரக்கூடிய இவரது உண்மையான பெயர் விஜயா என்றாலும் தெலுங்கு சினிமாவுக்காக ராசி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

மேலும் தன்னோட அது பெருசாக அந்த இயக்குனர் தான் காரணம் என்று அன்னை பேட்டியில் பேசி தன் ரகசியத்தை உடைத்து இருக்கும் ராசி மந்த்ராவின் பேச்சு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

இயக்குனர் தான் காரணம்..

இதற்குக் காரணம் ஏற்கனவே என் மீது இருந்த கவர்ச்சி நடிகை என்ற பிம்பம் பெருசாக அந்த இயக்குனர் செய்த வேலை தான் காரணம் என்ற  தகவலை எமோஷனலாக வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது நடிகை மந்த்ரா 2003-ஆம் ஆண்டு மகேஷ்பாபு ரவிதேஜா நடித்த நிஜம் என்ற படத்தில் நடித்த போது இவரது இமேஜ் மற்றும் கேரியரும் நாசமானது. அந்த படத்தில் ரவிதேஜாவோடு மிக நெருக்கமான காட்சியில் நடித்ததை அடித்து சினிமா வாழ்க்கை வீணாசி போனது.

மேலும் இயக்குனர் கதை சொல்லும் போது ஒன்றை சொல்லி படம் எடுக்கும் போது வேறு மாதிரி எடுத்துவிட்டதால் இது குறித்து நான் கேட்டேன். ஆனால் அட்வான்ஸ் வாங்கி விட்டதால் விருப்பம் இல்லாமல் படி அந்த படத்தில் நடித்து சினிமா கேரியரை இழந்தேன்.

 இது போலத்தான் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் அந்த படத்தில் வில்லனாக நடித்த கோபி சாந்துக்கு ஆசை நாயகியாக நடித்ததை நினைவு கூறுந்தார்.

---- Advertisement ----