பிரபல நடிகரின் காதல் வலையில் சிக்கிய நடிகை மீனா..! இது என்ன புது கூத்தா இருக்கே..!

அழகு பதுமையாக தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டு வந்தவர் தான் நடிகை மீனா.

இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் ஹீரோயினாக புகழ்பெற்று சிறந்து விளங்கி வந்தார் .

முதன் முதலில் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியிருந்தார் நடிகை மீனா .

நடிகை மீனா:

அதை அடுத்து மிகவும் இளம் வயதிலேயே இவர் சினிமாவில் ஹீரோயினாக ஆகிவிட்டார். தமிழ். தெலுங்கு கன்னடம். மலையாளம் இப்படி ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

மீனா ஒரு காலத்துக்கு கொடிகட்டி பறந்த நடிகையாகவும் இவரது கால்ஷீட்டுக்காக வருட கணக்கில் காத்திருந்த இயக்குனர்களும் இருந்திருக்கிறார்கள் .

அந்த அளவுக்கு பிஸியாக பார்க்கப்பட்டார். திரைப்படங்களில் மிகவும் பவ்யமாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மீனா.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து 90ஸ் காலகட்டத்தில் பிரபலமாக பார்க்கப்பட்டார்.

தொடர் வெற்றி படங்கள்:

இவரது நடிப்பில் வெளிவந்த வில்லன், வானத்தைப்போலே, ராஜகுமாரன் , முத்து, மாயி, மரியாதை, பொற்காலம், பெரியண்ணா, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நாடோடி மன்னன், தாய்மாமன், சிட்டிசன், கூலி, எஜமான், என் ராசாவின் மனசிலே, இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை மீனாவை பல பேர் காதலித்திருக்கிறார்கள். அதாவது நடிகர் சரத்குமார் கூட மீனாவை காதலித்து அவர் வீட்டிற்கு சென்று முறையாக பெண் கேட்டிருக்கிறார்.

ஆனால் மீனாவின் அம்மா சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவர் வேண்டாம் என கூறிவிட்டாராம்.

சரத்குமாரின் காதல்:

இப்படி சினிமாவில் பல நடிகர்கள் மீனாவின் மீது காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் மீனாவே பிரபல நட்சத்திரம் ஒருவர் மீது காதல் வயப்பட்டு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தற்போது அம்பலமாகி இருக்கிறது அதைப்பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆம் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் மற்றும் நடிகராகவும் ஹீரோவாகவும் இருந்து வந்தவர் தான் பிரபுதேவா .

பிரபுதேவா மற்றும் மீனா இவர்கள் இருவரும் இணைந்து டபுள்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை மீனாவுக்கும் பிரபுதேவாவுக்கும் கெமிஸ்ட்ரி ஓவராக அதிகரித்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில் இருவரும் மிக நெருக்கமாக சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது.

சில மாதங்கள் இந்த காதல் சென்று கொண்டிருந்த போதும் மீனாவின் தோழிகள் வந்து மீனாவின் மனதை கலைத்து விட்டார்கள் .

பிரபு தேவாவை காதலித்த மீனா

ஆம் பிரபுதேவா உன்னிடம் மட்டும் இல்லை எல்லா பெண்களிடமும் அவர் இப்படித்தான் பழகுவார். அவர் சரியான பிளேபாய்.

அதனால் உன்னுடைய வாழ்க்கையை அவருடன் சேர்ந்து கெடுத்துக் கொள்ளாதே அவரை விட்டுவிடு என கூறியதால் மீனா தன் தோழிகளின் பேச்சை கேட்டு அப்படியே பிரபுதேவாவை கழட்டி விட்டு விட்டார்.

இப்படியாக இவர் காதல் ஆரம்பித்தபோதே அழிந்து போனது. அதன் பிறகு மீனா தனது பெற்றோர்கள் பார்த்து வைத்த பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆன வித்தியாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு நைனிகா என்று அழகிய பெண் குழந்தை பிறந்தார் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தெறி திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார்.

இதனடியே மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2002 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நுரையீரல் தொற்று காரணமாக மரணமடைந்துவிட்டார். அதை அடுத்து மீனா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடும் தகது.

About Brindha

Check Also

சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

யாராக இருந்தாலும் சின்ன வயதில் அவர்களுக்கு என்று சின்ன சின்ன ஆசைகள் எழுவது இயற்கை தான். அந்த வகையில் திரைப்படங்களில் …

Exit mobile version