“எத்தனையோ ஆண் நண்பர்கள் இருந்தும்.. அந்த உணர்ச்சி…” வெக்கம் விட்டு ஓப்பனாக கூறிய நமீதா..!

தன்னுடைய ஆண் நண்பரை எப்படி காதலிக்க ஆரம்பித்தேன், எப்படி திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றேன் என நடிகை நமீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளளார்.

பொதுவாக பிரபலங்கள், குறிப்பாக சினிமா பிரபலங்கள், அதுவும் குறிப்பாக நடிகைகள் யாரையாவது காதலிக்கிறார்கள் அல்லது யாருனாவது மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றாலே திருமண வதந்திகள் கிளம்பி விடுவதை வாடிக்கை.

ஆனால், நடிகை நமீதா குறித்தும் அவருடைய காதல் குறித்தும் எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது கிடையாது. ஆனால். திடீரென திருமணம் செய்து கொண்டார் நமீதாம்.

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நமீதா. ஆரம்பத்தில் தன்னுடைய காதல் பற்றி வாய் திறக்காமல் இருந்த நாடிக்கை நமிதா சில வாரங்கள் சென்ற பிறகு தான் என்னுடைய ஆண் நண்பரை வெளியே சென்றதும் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றெல்லாம் கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி போனார்கள்.

நடிகை நமீதா எப்போதுமே தன்னுடைய காதலும் குறித்து எங்கேயும் பேசியது கிடையாது. ஆனால், நான் திடீரென பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய ஆண் நண்பரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை கூறினார். அவர் சொன்னது போலவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அடுத்த சில வாரங்களில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய ஆண் நண்பர் மீது எப்போது காதல் வந்தது..? என்ற கேள்விக்கு வெட்கம் விட்டு சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

எத்தனையோ ஆண் நண்பர்கள்..

நடிகை நமீதா கூறியதாவது, பாருங்கள்.. ஆண் நண்பர்கள் என அனைவருக்கும் இருப்பார்கள். நானும் நிறைய ஆண் நண்பர்களை கடந்து வந்துள்ளேன். அவர்களையெல்லாம் ஒரு நண்பராக அல்லது ஒரு மனிதராகத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்களுடன் பேசும்போது தொடங்கும்போது நான் உண்மையாகவே இருந்திருக்கிறேன். ஆனால், அவர்கள் அந்த இடத்தில் இல்லை என்றால் நான் அவர்களை மிஸ் செய்வது போல் உணர்வு ஏற்பட்டதா என்று கேட்டால்.. இல்லை என்று தான் கூற வேண்டும். அதுதான் உண்மை.

ஏனென்றால், என்னிடம் உண்மையான அன்பை காட்டியது யார் என்று எனக்கு தெரியவில்லை. பலர் நிஜமாக என்னிடம் உண்மையாகவே அன்பாக பல இருந்திருக்கலாம். அது எனக்கு புரியாமல் கூட போய் இருக்கலாம்.

எத்தனையோ ஆண் நண்பர்கள் எனக்கு இருந்தும் கூட அவர்கள் இல்லாத நேரங்களில் அவர்களை மிஸ் செய்கிறேன் என்ற உணர்ச்சி எனக்கு வந்தது கிடையாது. அதே போல என் கணவர் விரேந்திர சவுத்திரியுடனும்  நிறைய நாள் பழகியுள்ளேன். என்னை காதலிக்கிறேன் என்று அவரும் என்னிடம்  கூறியது கிடையாது. நட்பாக தான் இருவரும் பழகி கொண்டு இருந்தோம்.

விரேந்திர சவுத்திரியிடம் அந்த உணர்ச்சி..

பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது விரேந்திர சவுத்திரியை அதிகமாக நான் மிஸ் செய்கிறேன். அவருடன் இருந்த நேரங்களை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அப்போதுதான் இவரை நான் காதலிக்கிறேனோ என எனக்கு தோன்றியது.

நாட்கள் செல்லச் செல்ல இவர் மீது இருந்த காதல் அதிகமானது. இதனால் தான் பிக்பாஸ் வீட்டிலேயே நான் இவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று எல்லாம் சொன்னேனன்.

அந்த அளவுக்கு விரேந்திர சவுத்திரியை மிஸ் செய்கிறேன். அந்த உணர்ச்சி எனக்கு இவரிடம் தான் ஏற்பட்டது. இதை வெளியே சொல்வதற்கு எனக்கு வெக்கமில்லை. தொடர்ந்து பேசிய நடிகை நமீதாவின் கணவர் நான் பலருடன் பழகுவோம்.. சக மனிதர் என்ற அடிப்படையில் பழகுவோம்.. நண்பர் என்று அடிப்படையில் பழகுவோம்..

ஆனால், அனைவருடனும் உணவு அருந்த செல்வோமா..? அனைவருடனும் சுற்றுலா செல்வோமா..? என்று கேட்டார் கண்டிப்பாக கிடையாது. யாருடன் நம்முடைய உணர்வுகள் ஒத்துப் போகிறதோ.. அவர்களிடம் தான் நான் நேரம் செலவிடும் விரும்புகிறோம்.

அந்த வகையில் நடிகை நமீதாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கும் என்னை பிடித்திருந்தது. நாம் இருவரும் நிறைய நேரங்களை செலவு செய்திருக்கிறோம். அப்படி திடீரென அந்த நேரங்கள் இல்லை என்றதும் ஒருவர் ஒருவர் மிஸ் செய்கிறோம் என்ற உணர்வு அந்த உணர்வு தான் காதலை உருவாக்கி விட்டது என கூறியுள்ளார்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *