ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த உறுப்பு பெருசாக காரணம் இது தான்..! பிரபல நடிகர் விளாசல்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று சென்ற இடமெல்லாம் அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சின்னத்திரையில் நடித்து வந்து கொண்டிருந்த இவருக்கு நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அது கொஞ்சம் சர்ச்சையான கதாபாத்திரம்தான் என்றாலும் மொத்த படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அது இருந்ததால் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரேஷ்மா.

சீரியலில் வில்லி:

ஆரம்பத்தில் இவர் இந்த சீரியலில் நல்லவிதமான கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும் போகப் போக இவரது கதாபாத்திரம் மோசமானதாக மாறியது .தற்சமயம் இவர் அந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் என்று கூறலாம்.

அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் தற்சமயம் வில்லியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ரேஷ்மா அவரது உதட்டிற்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக ஒரு பேச்சு இருந்து வந்தது.

பயில்வான் கருத்து:

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசும்பொழுது ”சினிமாவில் கண் சரியில்லை, மூக்கு சரியில்லை வாய் சரியில்லை என்ற பல காரணங்களால் நடிகைகள் தங்களது முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது வழக்கம்தான்.

அப்படி யாரோ நடிகை ரேஷ்மாவிடம் அவரது உதடு சிறியதாக இருப்பதாக கூறி இருக்கின்றனர். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதற்கு பிறகு அவரது உதடு பெரிதாகிவிட்டது. இதனால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதே போல கடந்த காலத்தில் நடிகை ஸ்ரீதேவியும் அவரது மூக்கு சரியில்லை என்று பலர் கூறிய காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்து மூக்கின் வடிவத்தை மாற்றினார். ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கினர. என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.

ரேஷ்மாவின் பதிலடி:

இந்த நிலையில் பலரும் இப்படி அவரது அறுவை சிகிச்சை குறித்து பேசி வருவதால் அதற்கு பதில் அளித்த ரேஷ்மா கூறும் பொழுது என் உதட்டுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக பலர் கூறுகின்றனர்.

அது முதலில் அறுவை சிகிச்சையே கிடையாது அதன் பெயர் லிப் ஃபில்லர்ஸ் இது இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரணமான சிகிச்சை முறையாகும் ஆனால் நடிகைகளான நாங்கள் செய்யும் போது அது கொஞ்சம் பேசப்படும் விஷயமாக மாறுகிறது.

 அதை எல்லாம் தாண்டி எனக்கு பிடித்திருக்கிறது அதனால் நான் இந்த சிகிச்சையை செய்கிறேன். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை இதே போல்தான் நிறைய பேர் என்னை குண்டாக இருக்கிறேன் என்று கிண்டல் செய்து வந்தனர்.

எனக்கு இருக்கும் உடல் பிரச்சினை பற்றி அவர்களுக்கு தெரியாது. கடுமையாக உழைப்பதால் எனக்கு சரியான தூக்கம் கூட கிடைப்பதில்லை அதனால்தான் எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று கூறுகிறார் ரேஷ்மா.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …