டூ பீஸ் உடையில் சீரியல் குத்துவிளக்கு ஜனனி அஷோக்..!

பொதுவாக மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில்தான் மாடலிங் துறைக்கு வருகின்றனர்.

ஆனால் வருகிற அனைவருக்கும் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் சில நடிகர்கள் பெரிதாக கதாநாயகி ஆவதற்கான ஆர்வமே இல்லாமல் மாடலிங் துறைக்கு வந்து பிறகு அதிகமாக வரவேற்பு பெற்று இருக்கின்றனர்.

உதாரணத்திற்கு நடிகை வாணி போஜன் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் எல்லாம் மாடலிங் துறைக்கு வரவில்லை சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்தால்போதும் என்றுதான் வந்தார்.

சீரியலுக்கு வர காரணம்:

ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொழுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதே சமயம் இன்னும் சிலர் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் வந்து கடைசி வரைக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் உண்டு.

இதனால்தான் மாடலிங் துறைக்கு வரும் நடிகைகள் அடுத்தகட்டமாக சீரியலில் ஆர்வம் காட்டத் துவங்கின்றனர். ஒருவேளை சினிமாவில் கடைசி வரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட சீரியல்கள் அவர்களுக்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுக்கும்.

மேலும் தினசரி அதன் மூலம் சம்பளமும் கிடைக்கும். ஒரு நடிகை ஒன்றுக்கும் மேற்பட்ட சீரியலில் ஒரே நேரத்தில் நடிக்கும் போது அவருக்கு வருமானம் என்பது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மேலும் மக்கள் மத்தியில் அவருக்கு பிரபலம் கிடைக்கும்.

பிரபலமான நடிகை:

அதை பயன்படுத்தி பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று சம்பாதிப்பதற்கான வழிகள் இருக்கும். எனவே மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் இதனாலேயே சின்ன திரையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி சின்ன திரையில் பிரபலமாகி வரும் நடிகைதான் ஜனனி அசோக்குமார்.

ஜனனி அசோக்குமார் கடந்த சில வருடங்களாகதான் சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து என்கிற சீரியலில் முதன்முதலாக அறிமுகமானார் ஜனனி.

இந்த சீரியலின் பிரபலத்தை தொடர்ந்து வேற மாதிரி ஆபீஸ் என்கிற டிவி சீரியஸில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்த சீரிஸ் மொத்தம் 21 எபிசோடுகளை கொண்டு வெளியாகி வந்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து பிரபலமானார் ஜனனி அசோக்குமார்.

அதனை தொடர்ந்து இதயம் என்கிற சீரியலில் சமீப காலமாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டூ பீஸ் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …