நீ வரலன்னா கூட பரவாயில்ல.... உன் தோழிகள் யாராச்சும் அனுப்பு - நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்!

நீ வரலன்னா கூட பரவாயில்ல…. உன் தோழிகள் யாராச்சும் அனுப்பு – நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்!

சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பட வாய்ப்புகள் வேண்டும் என்றால் பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் தான் திரைப்பட வாய்ப்புகளே கிடைக்கும் என்ற நிபந்தனைக்கு நடிகைகள் தள்ளப்படுகிறார்கள்.

நடிகைகள் மட்டுமில்லாமல் திரைக்குப் பின்னால் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களுக்கும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தொடர்ந்து சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அட்ஜெஸ்ட்மென்ட்:

பல நடிகைகள் இது குறித்து பொதுவெளியில் வந்து வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் கூட இந்த பிரச்சனை குறைந்த பாடில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகையான பாவனா ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு நேரத்தில் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆள் ஆக்கப்பட்டார்.

பிறகு இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவே நடுங்கியது .

அதை அடுத்து இந்த விவகாரம் மிகவும் பெரிய விஷயமாக பேசப்பட்டதை தொடர்ந்து இது குறித்து வழக்கு தொடரப்பட்டது.

பாவனாவின் பாலியல் தொல்லை :

அதன் விசாரணையின் பின்னணியில் பிரபல மலையாள நடிகரான திலீப் தான் இந்த விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார் மற்றும் அவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீ வரலன்னா கூட பரவாயில்ல.... உன் தோழிகள் யாராச்சும் அனுப்பு - நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்!

இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒட்டுமொத்த மலையாள சினிமா பெண் தொழிலாளர்கள் மற்றும் திரைப்பட நடிகைகள் எல்லோரும் ஒன்று கூடி எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் இதற்காக ஒரு தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என கேட்டுக் கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் கேரளா அரசு பிரபல பெண் வழக்கறிஞர் ஆன ஹேமா தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து நடிகைகள் பாலியல் தொல்லை ரீதியான பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் புகார் கொடுக்கலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா அரசு அறிவித்திருந்தது .

இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

இது ஒவ்வொன்றாக வெளியாக ஒட்டுமொத்த கேரளா சினிமாவையே அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது பிரபல மலையாள சினிமாவின் இளம் நடிகியான ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரியாஸ் கான் மீது பாலியல் புகார்:

அதை எடுத்து அவர் மலையாள நடிகர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அடுத்ததாக நடிகை ரேவதி சம்பத் பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகரான ரியாஸ் கான் மீது பாலியல் புகார் ஒன்றை கூறியிருக்கிறார் .

நீ வரலன்னா கூட பரவாயில்ல.... உன் தோழிகள் யாராச்சும் அனுப்பு - நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்!

அதாவது ரியாஸ்கான் என்னை பாலியல் ரீதியாக அணுகினார். அது மட்டும் இல்லாமல் போனில் மிகவும் தப்பு தப்பாக தகாத முறையில் என்னுடன் பேசினார் என புகார் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் என்னுடன் உடலுறவுக்கு சம்மதிக்கும் உனது தோழிகள் யாராவது இருந்தாலும் சொல்லு என ரியாஸ்கான் தன்னிடம் கேட்டதாக கூறி ரேவதி சம்பத் அந்த புகாரில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரும் குணச்சித்திர நடிகருமான ரியாஸ் கான் வின்னர், பொன்னியின் செல்வன் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் தான் இவரது மகன் ஷாரிக்கிற்கு திருமணம் நடைபெற்றது. இப்படியான சமயத்தில் ரியாஸ்கானின் முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கும் ரேவதி சம்பத்தின் இந்த புகார் கோலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …