Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நடிகை சாவித்திரியின் அந்தரங்க பக்கம்..! படத்தில் கூட காட்டாத கருப்பு நாட்கள்..! போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என பல தர இந்திய மொழிகளில் 318 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசன் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் குண்டூரில் பிறந்தவர்.

சாவித்திரியின் இயற்பெயர் சசிகலா வாணி என்பதாகும். இவர் இளமைக்காலம் முதற்கொண்டு இசை மற்றும் நடனத்தை பயின்றவர்.மேலும் இளம் வயதில் மேடை நாடகங்களில் நடித்த ஆரம்பித்த இவர் பன்முகத் திறமையை கொண்டிருக்கிறார்.

நடிகை சாவித்திரியின் அந்தரங்க பக்கம்..

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை சாவித்திரி தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர்.

இதனை அடுத்து இவர் படங்களில் நடித்து வந்த போது இவருக்கு இவருக்கு மேனேஜராக, செக்யூரிட்டியாக இவரது மாமன் முறை உறவாக சவுத்ரியை நியமித்திருந்தார்.

---- Advertisement ----

இந்த நபர் இரண்டே ஆண்டுகளில் சாவித்திரியை தனது முழு கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததோடு யாரிடம் பேச வேண்டும் யாரிடம் பேசக்கூடாது எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பது போன்ற கடுமையான கட்டுப்பாட்டுகளை  விதித்து சாவித்திரியை டார்ச்சர் செய்து வந்தார்.

இந்நிலையில் சாவித்திரி ஜெமினி கணேசன் உடைய இணைந்து மிஸ்ஸியம்மா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியும் வசூலையும் பெற்று தந்தது.

அந்த சூழ்நிலையில் சாவித்திரி தனக்கு உற்ற துணையாக ஜெமினிகணேசன் இருப்பார் என்று நினைத்ததை அடுத்து சென்னையில் கடுமையாக மழை பெய்த சமயத்தில் தனது வீட்டில் இருந்து ஜெமினி கணேசன் வீட்டுக்கு சென்று தனது மாமா தன்னை அதிக அளவு டாக்ஸ் செய்வதாக கூறியதை அடுத்து ஜெமினியின் மனைவி மூத்த மனைவி இவருக்கு ஆதரவளித்தார்.

 

படத்தில் கூட காட்டாத கருப்பு நாட்கள்..

இதனை அடுத்து சென்னையில் இருக்கக்கூடிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றில் சாவித்திரியை தங்க வைத்த ஜெமினி கணேசன் அவரோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.

இதனை அடுத்து நடிகையர் திலகம் சாவித்திரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து பல படங்களில் நடித்து சாவித்திரி பல்வேறு சொத்துக்களை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அன்று வெளிநாட்டு கார் வைத்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

இந்த சூழ்நிலையில் நடிகையர் திலகம் சாவித்திரிக்கு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு பிராப்தம் என்ற படத்தை நடிகையர் திலகம் சிவாஜியை வைத்து எடுத்திருந்தார். 

ஆனால் இந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஜெமினி கணேசன் அதற்கு தடை போட்டதை அடுத்து இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு ஜெமினியிடம் கூறிவிட்டார்.

போட்டு உடைத்த பிரபல நடிகர்..

மேலும் இதை சற்றும் எதிர்பாராத ஜெமினி கணேசன் சாவித்திரியிடம் நீ என்னை வெளியே செல்ல சொல்லிவிட்டாய் இதை அடுத்து முதலில் சரஸ்வதி வெளியேறும் பிறகு திருமகள் வெளியேறுவாள். பின்னர் சக்தியும் வெளியேறுவாள் என்று சொல்லி இருக்கிறார்.

மது போதையில் ஜெமினி கணேசன் இடம் வீட்டை விட்டு வெளியேற சொன்னதற்கான காரணம் அவர் தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய நடிகைகளிடம் உறவு கொண்டிருந்தார். அதை எல்லாம் மனதில் வைத்து தான் அவர் அப்படி பேசி இருக்கிறார்.

மேலும் ஜெமினி கணேசன் தன்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு சந்திரபாபு உடன் ஜோடி போட்டு நடித்த இவர் ஓய்வு நேரங்களில் இருவரும் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து தனது இறுதி நாட்களில் 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்த சாவித்திரி டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு இறந்து போனார் இறப்பின் போது அவருக்கு 45 வயது தான் ஆகியிருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகையர் திலகம் சாவித்திரியன் அந்தரங்க பக்கத்தை அசால்டாக போட்டு உடைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top