Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

என் பின்னழகை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி.. எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.. ஷோபனா ஓப்பன் டாக்..!

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது இருக்கும் 2கே காலகட்டம் வரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.

தொடர்ந்து எப்போதும் வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் ஒரு சில முறை தமிழ் சினிமாவில் தோல்வியையும் கண்டுள்ளார். இருந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்த வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அதற்குப் பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது .

வாய்ப்பை பெற்ற நடிகர்:

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தோடு சேர்ந்து நடித்த நடிகைகளில் நடிகை சோபனா முக்கியமானவர் தளபதி திரைப்படத்தில் ரஜினியுக்கு ஜோடியாக நடித்த இவர் பிறகு ஒரு சில திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்

சிவா என்கிற திரைப்படத்திலும் நடிகை ஷோபனாதான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் மழையில் நனைந்து கொண்டு ஆடுவது போன்ற பாடல் ஒன்று இருக்கும். அந்த டூயட் பாடலில் நடந்த சங்கடத்தை ஷோபனா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அந்த பாடலில் நடிக்க வரும் பொழுது முன்கூட்டியே மழை காட்சி கொண்ட பாடல் என்பதை கூறவில்லை. ஷோபனாவும் மாடல் உடையில் அங்கு சென்றுவிட்டார். அங்கு சென்ற பிறகுதான் ஷோபனாவிற்கு வெள்ளை புடவை கொடுத்து அணிந்து கொண்டு வந்து அந்த பாடலில் நடிக்க சொல்லி இருக்கிறார்கள்.

நடிகைக்கு வந்த சம்பவம்:

ஆனால் மழைப்பாடல் எனும் பொழுது உள்ளே பாவாடை கட்டிக்கொண்டுதான் புடவையை கட்ட வேண்டும். ஆனால் அதற்கு தயாராக ஷோபனா வரவில்லை. இதனால் இந்த காட்சியில் எப்படி நடிப்பது என்று கவலையில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் அங்கு மேசையில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் இருந்துள்ளது அதனை எடுத்து பாவாடை போல சுற்றிக்கொண்டு அதன் மேல் வெள்ளை புடவையை கட்டிக்கொண்டு அந்த பாடலில் நடித்துள்ளார். அப்பொழுது ரஜினி ஷோபனாவை தூக்குவது போன்ற காட்சி ஒன்று வரும்.

அந்த காட்சியில் ஷோபனாவை தூக்கும்பொழுது மடமடவென்று சத்தம் வந்துள்ளது. அதனை கேட்டு ரஜினி அதிர்ச்சி அடைந்துள்ளார் இருந்தாலும் அப்பொழுது சமாளித்து அவர் நடித்து விட்டார்.

பிறகு படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த விஷயத்தை ஷோபனா ரஜினியிடம் கூறியிருக்கிறார். மேலும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு பிறகு ரஜினியும் அதை வெளியில் சொல்லவில்லை என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஷோபனா.

Continue Reading

More in Actress

Trending

To Top
Exit mobile version