Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கணவர் இறந்த ஒரே வருஷத்தில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா செய்த வேலையை பாருங்க..!

சிறந்த ஜோடிகளாக இருந்துவிட்டால் அவர்கள் கூடிய விரைவிலேயே யார் கண் பட்டு விடுகிறதோ தெரியவில்லை மன கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள்.

அப்படியும் தாண்டி சில ஜோடிகள் மட்டும் உண்மையிலே காதலித்து அவர்கள் நூறு வருஷம் சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டு தனது மனதில் கோவில் கட்டி திருமண வாழ்க்கையை தொடங்கினால் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்து ஒரே அடியாக நிரந்தரமாக அந்த ஜோடி பிரியும் படி கடவுள் செய்து விடுகிறார்.

சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா:

அப்படித்தான் நாதஸ்வரம் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இவர் அந்த தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸானார். திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த அந்த தொடரில் சண்முகப்பிரியா மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

அதன் மூலம் அவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க தொடங்கியது. பொன்னூஞ்சல், கல்யாணப்பரிசு, வாணி ராணி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற சீரியலில் இவர் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வந்தவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியார் நடித்திருந்தார் சண்முகப்பிரியா.

மிகச்சிறந்த நடிகையாகவும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து நிட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து சீரியல் நடிகையாகவும் இருந்து வந்தார் ஸ்ருதி சண்முகப்பிரியா.

கணவர் மரணம்:

இப்படியான நேரத்தில் கடந்த ஆண்டு ஸ்ருதி மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் என்ற அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு பின்னர் நண்பர்கள் முன்னிலையில் முன்னிலையில் எளிமையாக திருமணமும் செய்து கொண்டார் .

இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வந்தார்கள்.

இதனிடையே யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திருமணமான சில மாதங்களிலேயே. மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்து விட்டார் .

கணவரின் மரணம் ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. மனமடைந்து போன ஸ்ருதி சண்முக பிரியாவுக்கு சீரியல் நண்பர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதல்களையும் தெரிவித்து தேற்றினார்கள்.

அதன் பின்னர் கணவர் இறப்பிற்கு பிறகு மீண்டும் சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் சுருதி நடித்து வரும் லட்சுமி தொடரில் நடிக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் அவரின் மன உறுதியை பாராட்டியதோடு தொடர்ந்து இதுபோன்று வேலையில் கவனத்தை செலுத்தினால் மன கஷ்டம் குறையும் எனக் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் சுருதி சண்முக பிரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளது .

இறந்த கணவர்… கேக் வெட்டி கொண்டாட்டம்:

ஆம் தனது கணவர். இறந்துவிட்ட நிலையில் தனது கணவர் இல்லாமலே இரண்டாவது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டால் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடுகிறேன். நீ என் பக்கத்தில் இருப்பதற்காக தான் நான் உணர்கிறேன் .

இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக என்னை கேலி செய்தாலும் என் பக்கத்தில் இருப்பது போல நான் நினைத்துக் கொள்கிறேன்.

நீ எப்போதும் என் அருகில் தான் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன் என மிகவும் எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார் ஸ்ருதி. இந்த பதிவு ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top