“இதனால் தான் கவர்ச்சி உடைகளை அணிவதை தவிர்க்கிறேன்..” -ரகசியம் உடைத்த சாய் பல்லவி..!

நடிகை சாய் பல்லவி எதனால் கவர்ச்சியான உடைகளை அணிவதில்லை என்ற ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பிரேமம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனால் அதற்கு முன்பே பல்வேறு நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அம்மணி.

நடிகை சாய் பல்லவி குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

குறிப்பாக ஒரு நடன மாடியபோது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருந்தார் நடிகை சாய் பல்லவி.

ஆனால் அவர் அந்த நடனத்தில் வெளிப்படுத்தக்கூடிய அசைவுகளுக்கு அப்படியான உடையை அணிந்தால் தான் ஏதுவாக இருக்கும் என்பதால் அந்த உடையை அணிந்து ஆட்டம் போட்டு இருந்தார் சாய் பல்லவி.

ஆனால் அதனை அருவருப்பாக சித்தரித்து அந்த புகைப்படங்களை தன்னுடைய தொடை அழகு மட்டும் எடுப்பாக தெரியும் விதமான ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்து இணையத்தில் விவகாரமான தலைப்புகளுடன் பதிவு செய்து வந்தனர். இது எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.

[irp posts=”73812″ ]

என்னுடைய திரைப்பயணத்தை புரட்டிப் பார்க்கும் பொழுது என்னுடைய குழந்தைகள் மற்றும் வருங்கால சந்ததியினர் மற்றும் நான் முகம் சுளிக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

எனவே தான் அந்த சம்பவத்திற்கு பிறகு நான் கவர்ச்சியான உடைகளை அணிவதை தவிர்த்து வருகிறேன். படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்காமல் இருந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் சாய் பல்லவி தனித்து நிற்கிறார். காரணம் பிரபல அழகு சாதன கிரீம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று நடிகை சாய் பல்லவிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து எங்கள் விளம்பரத்தில் நடிக்குமாறு கேட்டனர்.

ஆனால் நடிகை சாய் பல்லவி வெள்ளையாக இருப்பது தான் அழகு என்ற பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்ட ஒரு விளம்பரத்தில் என்னால் நடிக்க முடியாது என்ற அந்த விளம்பர நிறுவனத்தை ஓடவிட்டார் என்பதுதான் ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்த மரியாதையை இன்னும் கூட்டியது என்று கூறலாம்.

இந்நிலையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவியின் பின்னால் இப்படி ஒரு சோகமான கதை இருப்பதை அறிந்த ரசிகர்கள் வேதனையில் இருக்கின்றனர்.

Summary in English : Sai Pallavi is an Indian actress who has made her mark in the world of cinema. She is known for her unique style and fashion sense, which includes a preference for more natural, casual outfits. In this article, we explore Sai Pallavi’s reasons for avoiding glam dresses in her public appearances and how it reflects her personal style and beliefs.

[irp posts=”73329″ ]