Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என் பொண்டாட்டி மேல இந்த பெரிய டைரக்டருக்கு ஒரு கண்ணு.. அகோரி கலையரசன் கதறல்..!

கேப்டன் விஜயகாந்த், பாரத பிரதமர் மோடி பற்றி பல்வேறு விஷயங்களை பேசிய அகோரி கலையரசன் சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் இவர்களைப் பற்றி எல்லாம் பேசி பரபரப்பு கிளப்பியதோடு, பிரபலமான நபராக மாறியவர்.

இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர். தன்னைத் தானே அகோரி என்று கூறிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தன் மனதில் பட்டதை பேசி சர்ச்சையை கிளப்பி அனைவரையும் தன் பக்கம் திருப்பி விடக் கூடியவர்.

பெரிய இயக்குனருக்கு..

அந்த வகையில் இவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல் தளபதி விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்த இவர் நம் பாரத பிரதமர் மோடி போன ஜென்மத்தில் சித்தராக விளங்கியவர் என தன் சிந்தையில் தெரிகிறது என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அவர் நினைத்தாலே அவர்களின் முன் ஜென்மம் எப்படி இருந்தது என்பதை தன்னால் சொல்ல முடியும் என பேசிய அகோரி கலையரசன் தற்போது சொன்ன விஷயம் இணையங்களில் பேசும் பொருளாகி விட்டது.

---- Advertisement ----

இதற்கு காரணம் இவர் தற்போது அரசியல், பணம் பலம் நிறைந்த பெரிய இயக்குனர் ஒருவர் தன் மனைவி மீது ஆசை படுவதோடு ஒரு கண் வைத்ததாக அண்மை பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த பேட்டியில் அந்த பெரிய இயக்குனரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்த போது அவருக்காக டாக்குமெண்ட் பூஜை செய்து தருமாறு அவர் வேண்டியதாக கூறியதை அடுத்து கூடுவான்சேரியில் உள்ள பெரிய பண்ணை வீட்டில் என்னை தங்கச் சொன்னார்.

என் பொண்டாட்டி மேல..

அத்தோடு அந்தப் பண்ணை வீட்டில் எங்களுக்கு ஆறு வேலையாட்களை வைத்து அவர் செய்திருந்த ஏற்பாடுகள் அனைத்தையும் எனக்கு வீடியோ காலில் காட்டிய அவர் தனக்காக ஒரு புதிய பென்ஸ் காரை வாங்கி வைத்திருப்பதாக கூறினார்.

அப்போது கூட எனக்கு அந்த பெரிய இயக்குனர் எதற்காக இவ்வளவு செலவுகளை செய்ய வேண்டும் என புரியவில்லை. எனினும் என் மனைவி ஏதோ தப்பா இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

 

என் மனைவி பேசிய பேச்சானது எனக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த பெரிய இயக்குனர் போன் செய்யும் போது போனை எடுக்காமல் தவிர்த்து விட்டேன்.

கதறிய அகோரி கலையரசன்..

அப்படி நான் போனை எடுக்காத காரணத்தால் ஒரு நாள் கடுப்பாகி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார். அப்போது தான் எனக்கு அவரது சுயரூபம் தெரிய வந்தது. அந்த நிமிடம் வரை என்னை சாமி, சாமி என்று மரியாதையோடு அழைத்த அந்த பெரிய இயக்குனர் மரியாதை இல்லாமல் பேச ஆரம்பித்தார்.

அது மட்டுமல்லாமல் என் மனைவி போட்டோவை கேட்ட அந்த பெரிய இயக்குனருக்கு என் மனைவி மீது ஒரு கண் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் என் அம்மாவை வீடியோவில் பார்த்துவிட்டு அவரும் வேண்டும் என்று வாய் கூசாமல் கேட்டார்.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்று அகோரி கலையரசன் பேட்டியில் பேசிய விவகாரம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை பற்றி பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அகோரி கலையரசன் கூறிய விஷயத்தை பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top