பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் சமுத்திரகுமாரியாக தனது கேரக்டரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்படி செய்துவிட்டார்.
தமிழ் சினிமா இருக்கும் வரை எந்த கேரக்டர் தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்து பதிந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக திரை உலகில் உள்ளது.
அதிலும் வந்தியத்தேவனை கப்பலில் கூட்டிச் செல்லும்போது இவர் கண் ஜாடையில் பேசும் விதம் காதலை அழகாக எடுத்து உணர்த்தும் சோழ குல பெண்ணாக இவர் நடித்திருக்கும் நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.
இதுபோன்ற எதார்த்த நடிப்பை மணிரத்தினத்தால் மட்டும்தான் இப்படி வெளிப்படுத்தக் கூடிய வகையில் நடிகர்களிடம் வேலை வாங்க முடியும் என்று எண்ணத் தூண்டக்கூடிய வகையில் தான் அவரது நடிப்புத் திறன் இருந்தது.
மேலும் ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுலகில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னனி நடிகராக திகழும் தனுஷ் நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் பல வைரலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்து வரும் பூங்குழலி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு நிகழ்வானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை மட்டுமல்லாமல் ஷாக்கையும் ஏற்படுத்தி விட்டது.
அட இது உண்மையா? என்று பலரும் தங்களை தாங்களே கிள்ளிக் கொள்ளும்படி ஐஸ்வர்யா லட்சுமி பகிர்ந்திருக்கும் அந்த சம்திங் சம்திங் செய்தி ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரது நடிப்பில் தற்போது வெளிவந்த கட்டா குஸ்தி படத்தில் நடிகர் விஷாலின் நடிப்பையே தூக்கி விழுந்த கூடிய அளவு இவரது நடிப்பு இருந்தது என்பதை எல்லோரும் வரவேற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டியும் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து தற்போது இவர் சமூக வலைதளத்தில் தான் காதலித்துக் கொண்டிருக்கும் நபரை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இவர் கைதி மாஸ்டர் என பல படங்களில் நெகட்டிவ் ரோடு செய்தவர்.
நீங்கள் யோசிப்பது போல அந்த நபர் வேறு யாருமில்லை அர்ஜுன் தாஸ் இவர் அர்ஜுன் தாசுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு அதில் ஒரு ஹார்ட்டையும் போட்டு இருக்கிறார்.
இதுதான் தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு இடையே சம்திங் சம்திங் என்ற அந்த கிசுகிசுவை கிளப்பி விட்டிருப்பதோடு இந்த ஜோடிகளுக்கு வாழ்த்தும் குவிந்து வருகிறது.