நடிகர் விஷாலின் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து இருந்த கார்கி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கேரளாவில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமானார்.
இவரும் சாய்பல்லவி, அதிதி சங்கர், ஸ்ரீலீலா ஆகியோரைப் போலவே மருத்துவ மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக சினிமா துறையை நோக்கி படையெடுக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
இதனை பலரும் மருத்துவத்தை பார்க்காமல் சினிமாவில் வந்து நடிப்பதன் நோக்கம் என்ன..? என்று கேள்வி கேட்பதுண்டு. மேலும் சினிமாவில் தான் அடிக்க போறோம் என்று தெரிந்துவிட்டால் எதற்காக வீணாக ஒரு மருத்துவ சீட்டை வீணடிக்க வேண்டும்.
அதை விட்டுக் கொடுத்து இருந்தால் இன்னொரு மாணவர் மருத்துவராகி இருப்பார் என்று கூட பலரும் கருத்துக்களை பதிவு செய்வது உண்டு. ஆனால், என்ன படிக்க வேண்டும்..? எந்த தொழில் செய்ய வேண்டும்..? என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உரிமை என்பதால் அதில் மேற்கொண்டு விவாதிக்க ஒன்றுமே கிடையாது.
அந்த வகையில் மருத்துவம் படித்துவிட்டு தற்பொழுது நடிகையாகத் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக நடித்து வரும் இவர் கையில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் இருக்கின்றன.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா லட்சுமியின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படம் வெளியான பிறகுதான் அதை எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியவரும்.
இந்நிலையில் 70 வயதாகும் மலையாள நடிகர் மம்முட்டி ஜோடியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.