பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரவும் பழக்கம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று பகிரங்கமான தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, திரை உலகம் என்பது ஒரு வர்ணமயமான உலகம். அதில் பூ மழை பொழியும், விமர்சனங்கள், தவறான தகவல்கள், வதந்திகள் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், நடிகைகளின் நிலைமை என்னும் மோசமாக இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார். சினிமாத்துறைக்குள் நான் நுழைந்த பொழுது என்னுடைய நிறம் அழகு உருவம் என பல விஷயங்களை நான் கேலி செய்யப்பட்டிருக்கிறேன். துன்புறுத்தப்பட்டிருக்கிறேன்.
பட வாய்ப்புகள் தொடர்பாக பாலியல் தொல்லைகளையும் சந்தித்து இருக்கிறேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். சினிமா பிண் புலமே இல்லாமல் சினிமா துறைக்கு வந்தவர்களுக்கு தான் இப்படி ஆன பாலியல் தொல்லைகள் இருக்கும் என கருத்து நிலவுகிறது. ஆனால் அது பொய்.
சினிமா பின்புலம் இருப்பவர்களுக்கு இப்படியான பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. ஆனாலும், நான் எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. என்னுடைய திறமையை நம்பி சினிமாவிற்கு வந்தேன். திறமையை நம்பினால் மட்டுமே வாய்ப்புகள் வரும் எனக் கூறுகிறார் ஐஸ்வர் ராஜேஷ்.
என் மீது நான் கொண்டிருக்கக்கூடிய தன்னம்பிக்கை தான் இன்று என்னை உங்கள் முன் நிற்க வைத்திருக்கிறது என்று பேசி இருக்கிறார். சினிமா துறையில் காலடி எடுத்து வைக்கும் பொழுது என்னை.. நீங்கள் யார்..? உங்களின் நிறம் என்ன தெரியுமா…? கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்திருக்கிறீர்களா..? என்றெல்லாம் கேலி செய்யும் விதமாக பேசியிருக்கிறார்கள் என்று தன்னுடைய பழைய காலத்தை நினைவு கூர்ந்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நீ எல்லாம் ஹீரோயினா என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்ததாகவும் என்னிடம் கூறி என்னை சங்கடப்படுத்தினார்கள். அவருடைய கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகின.
என் தந்தை மூத்த சகோதரர்களின் தொடர் மரணம் என என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஒரு சோக கதையாக இருக்கிறது. என்னுடைய எட்டு வயதில் தந்தையை இழந்தேன்.
அடுத்த மூன்று வருடங்களில்என்னுடைய அண்ணங்களும் இறந்து போனார்கள். இப்படி மீள முடியாத சோகத்தில் இருந்த எனக்கு குடும்ப சூழல் மோசமாகியதால் சீரியல் நடிப்பது குடும்ப சீரியல் நிகழ்ச்சிகளை சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என குடும்பத்தை கவனித்து வந்தேன்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அம்மாவின் அறிவுரையோடு தான் சினிமா துறைக்கு வந்தேன். ஆனால் என் நிலத்தாலும் அழகாலும் முகஸ்துதி இல்லை என்ற காரணங்களாலும் எனக்கு ஆதரவு கிடைக்காமல் போனது போன்ற கசப்பான அனுபவங்கள் என்னுடைய திரை பயணத்தில் நிறைந்திருக்கின்றன என பதிவு செய்திருக்கிறார்.
மேலும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் பகிரும் பொழுது பொதுவாக சில வார்த்தைகளை கூறுவார்கள்.. சாதாரணமாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும்.. அக்ரிமெண்ட் போட்டுக்கலாமா..? என்றெல்லாம் கேட்பார்கள். இன்னும் சிலர் ஒரு அரை மணி நேரம் வந்துட்டு போங்க என்று வெளிப்படையாகவே பேசுவார்கள் என பதிவு செய்திருக்கிறார் ஐஸ்வர் ராஜேஷ் இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.