அய்யய்யோ ஐஸ்வர்யா ராஜேஷு [Aishwarya Rajesh] – க்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே. இது போன்ற காட்சிகளில் இவர் எப்படி நடிப்பதற்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்று ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.
காக்கா முட்டை திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற இவர் ஏன் இப்படி அந்த களத்தில் குதித்தார். சினிமாவில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் அதில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படிப்பட்ட கேரக்டரை தேர்வு செய்து நடித்தாரா? என்று கேட்க தோன்றும் அளவு உள்ளது.
மேலும் மார்க்கெட் இல்லாத சமயத்தில் அமலாபாலும் ஆடை என்ற திரைப்படத்தில் அரை நிர்வாணத்தோடு நடித்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். அவரை அடுத்து இவர் வெப் சீரியலுக்காக இந்த மாதிரி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாரா?
இதற்கு காரணம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் த்ரில்லர் உருவாகவுள்ள புதிய வெப்சீரிஸ் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் இந்த விஷயம் லீக் ஆன உடனேயே ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் அனைவரும் இது தேவையில்லாத வீண் பரிச்சை உங்களுக்கு உள்ள மார்க்கெட் எப்போதும் இருக்கும் திடீர் என இந்த முடிவுக்கு நீங்கள் சென்றிருக்க வேண்டாம் என்பது போன்ற கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
டஸ்கி ஸ்கின் அழகியான இவருக்கு என்று திரை உலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல பெயர் உள்ளது.மேலும் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் முன்னணி கதாநாயகியாக கூடிய வாய்ப்புகளும் அதிக அளவு உள்ளது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். மிகச் சிறந்த நடன புயலான கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சிகள் பங்கு பெற்று வெற்றியாளர் ஆனார்.
இதனை அடுத்து தான் இவருக்கு சினிமாவில் தொடர் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது இவருடைய தந்தையும் தெலுங்கு ஐம்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரது அண்ணன் மணிகண்டன் சீரியல்களில் நடித்து இருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களான ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அண்மையில் வெளிவந்த ஃபர்ஹானா படமும் இவரது பெயரை சொல்லும் படி இருந்தது. இந்தப் படத்திலும் இவரது வித்தியாசகரமான நடிப்பு பேசும்படி இருந்தது.