ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) தற்போது தீரா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரோகினி வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த தீரா காதல் திரைப்படம் நேற்று ( மே 26 ) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லா கதைக்கும் பின்னும் ஒரு கதை இருக்கும் சில நேரங்களில் பல கதைகள் இருக்கும். அதே போல் தான் எனக்கும் இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் இரண்டு வருட கதை இருக்கிறது.
நாங்கள் பல நாட்கள் முன்னதாகவே செய்ய வேண்டி பல படங்கள் இருகின்றன. எங்கள் கதையை கேட்டு அதை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. எனது நீண்ட நாள் நண்பர் தமிழ்குமரன் லைக்கா நிறுவனத்தில் தற்போது உயரதிகரியாக இருக்கிறார்.
அவருக்கு நான்கு கதைகள் அனுப்பி வைத்தேன். அதில் இந்த கதையும் ஒன்று. இந்த படத்திற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு திருப்பதிக்கு பாதயாத்திரை கூட சென்றோம்.
செல்லும் வழியில் தயாரிப்பாளர் தமிழ்குமரன் போன் செய்து இந்த படத்தை நாம் தயாரிக்கலாம் என்று கூறினார். இந்த படம் இதமான ஒரு அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும். நடிகர் ஜெய் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரே முடிவாக இருந்தார் இயக்குனர். ஏனென்று தெரியவில்லை.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு நீங்களும் ஆதரவு தர வேண்டும் என பேசி இருந்தார். இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகை இந்த வெப்சீரிஸில் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்க சம்பந்தம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடையின்றி நடிக்கிறார் என்றாலும் கூட அந்த காட்சிகள் மோசமாக காட்டப்படாது.
எல்லோரும் பார்க்கும் படியான காட்சிகள் படமாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
பட வாய்ப்புக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க இறங்கி வந்திருப்பது அறிந்த ரசிகர்கள் கண்கள் சிமிட்டுவதை மறந்து வாயை பிளந்திருக்கின்றனர்.