விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எதிர வைக்கக்கூடிய வரிசையில் இருந்த ராஜா ராணி தொடரில் அருமையாக நடித்தவர்தான் ஆலியா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புது சீரியலான இனிய சீரியல் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.
தனது இரண்டாவது பிரசவத்துக்கு பிறகு உடல் உடல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது கடினமான உடற்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைத்து பக்காவாக காட்சி அளித்து வருகிறார்.
மேலும் இவர் திடீரென்று விபத்து ஏற்பட்டதன் மூலம் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அத்தோடு காலில் பெரிய கட்டு வேறு போடப்பட்டுள்ளது.
இதனை தற்போது இவர் இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி விட்டது.
மேலும் இந்த வீடியோவில் ஆலியா மானசா தன்னுடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் தனக்கு விரைவில் குணமாக கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என்று சோகமாக பேசியிருப்பது அனைவரது நெஞ்சையும் உருக்கி விட்டது.
மேலும் அடிக்கடி இவர் மீடியாவில் துருதுருவென டான்ஸ் மாஸ்டர்களோடு இணைந்து டான்ஸ் ஆடி ஓவர் அலப்பறையை காட்டியதால் தான் கண் பட்டுவிட்டதோ என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
சன் டிவியில் தனது கணவர் என்ற சீரியலில் நடித்து வருவதால் தான் விஜய் டிவிக்கு குட்பை சொல்லிவிட்டு இனிய சீரியலில் நடிக்கச் சென்றதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இதனை அடுத்து இவர் நடித்துவரும் இனியா சீரியலும் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை தொட்டு டிஆர்பி யில் எகிறியது.
இதனை அடுத்து இதை கொண்டாடுவதற்காக சஞ்சீவ் மற்றும் ஆலியா துபாய் சென்று என்ஜாய் பண்ணிய புகைப்படங்கள் அனைத்தையும் சமீபத்தில் தான் இன்ஸ்டால் வெளியிட்டார்.
இதனை அடுத்து இவர் காலில் அடிபட்டு இருப்பதை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என்று பிராத்தித்து வருகிறார்கள்.