தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைக்குரிய படங்களில் நடித்திருக்கும் நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்தியது.
ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள தியேட்டர்களில் ஓட்டக்கூடிய அளவுக்கு படுமோசமான கதை கொண்ட இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார் நடிகை அமலா பால்.
அதனை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை அமலா பால்.
இந்த படத்தில் இயக்குனராக இருந்த ஏ எல் விஜய் காதலித்து வந்த இவர் அவரையே திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகள் அவரோடு வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்றார்.
தற்பொழுது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்பொழுது மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
இதனால் அமலாபாலும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார். இவருடைய முதல் படமே விவகாரமான படம் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் அதைவிட ஒரு விவகாரமான படம். இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலுமே சர்ச்சைக்குரிய நாயகியாகவே வந்து கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால்.
இடையில் பிரபல தொழிலதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து பரபரப்பை கிளப்பினார். சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி.
நிலையில் மலையாளத்தில் அமலாபால் நடித்த கடாவர் என்ற திரைப்படம் ஓடிட்டியில் வெளியானது. இந்த சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. இந்நிலையில் பட வாய்ப்பு இல்லாததால் சோசியல் மீடியாவே தன்னுடைய வீடாக நினைத்துக் கொண்டே குடியிருக்கும் நடிகை அமலாபால் நான் என்னை கண்டு பிடித்து விட்டேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் இருக்கும் ஒரு பெண் தன்னுடைய நடுவிரலை காட்டியபடி நெத்தியில் இருக்கும் மூன்றாவது கண்ணை குறிக்கும் விதமாக நீருக்குள் இருந்து எழுந்து வருவது போல காட்சி அளிக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை கடுமையாக விளாசி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தோடு யாரும் இது எளிதானது என சொல்லவில்லை.. அவ்வளவு கடினமாக இருக்கும் என்றும் யாரும் சொல்லவில்லை.. ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை ஓடுகிறது.. என் வாலை துரத்துகிறேன்.. நான் நானாக திரும்பி வருகிறேன்.. என்று பதிவிட்டு இருக்கிறார்.
எங்கே திரும்பி வரப்போகிறார் என்று அடுத்தடுத்த நடவடிக்கைகளை பார்த்தால் தான் தெரியும். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர் குடும்பத்தில் கடுமையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை.