“அதை ரிலீஸ் பண்ணிடுவேன்..” – மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நண்பர்..! – அமலா பால் பகீர் புகார்..!

தன்னுடைய முதல் படமான சிந்து சமவெளி ஆரம்பித்து திரைப்பட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என பல சர்ச்சைகளில் சிக்கி இருப்பவர் நடிகை அமலாபால்.

தமிழில் மைனா வேட்டை தலைவா தெய்வத்திருமகள் வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் AL விஜயுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்தும் செய்தார். தொடர்ந்து சுதந்திர பறவையாக சுற்றி வரும் நடிகை அமலாபால் ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல பாடகருமான தனது நண்பரும் பிரபல பாடகருமான ரவிந்தேர் சிங் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கியது. இதனை தொடர்ந்து இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்டது தவிர உண்மை கிடையாது என்று அமலா பால் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அமலாபால் தன்னுடைய நண்பர் பவிந்தர் சிங் மீது பாலியல் தொல்லை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்றும் இன்னும் சில வகைகளில் மிரட்டி தன்னிடம் சொத்துக்களை மோசடி செய்திருக்கிறார் என்றும் தன்னுடைய நண்பர் மீதே அமலாபால் புகார் கொடுத்திருக்கிறார்.

இதை தொடர்ந்து அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது சினிமா வட்டாரத்தில்.