கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் நடிகை அமலா பால் தற்போது தனது குடும்பத்தாருடன் குருவாயூர் கோயிலுக்கு சுவாமியை தரிசிக்க சென்று இருக்கிறார்கள்.
உலகப் பிரசித்தி பெற்ற குருவாயூர் திருக்கோயிலில் நடைபவனி நேற்று முதல் ஆரம்பமானதால் மக்கள் திரளாக வருகை தந்திருந்தார்கள்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத கோயில் நிர்வாகத்திற்கு அமலா பால் வந்திருந்தது தெரிந்த உடனேயே அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? தொடக்க காலத்திலிருந்து இந்த கோயிலுக்குள் மாற்று மதத்தினரை உள்ளே விடுவதற்கு அனுமதி இல்லாத இருப்பதின் காரணமாக தற்போது அமலாபால் வேற்று மதத்தை சார்ந்து இருக்கக்கூடிய காரணத்தால் அவரை உள்ளே சென்று கடவுளை வழி படுவதற்கு தடை செய்ய இருக்கிறார்கள்.
இந்த பழக்கம் புதிதல்ல தொன்று தொற்று மரபாக இத்திருக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. இதை அறிந்து கொண்ட அமலாபால் எந்த விதமான சர்ச்சைகளிலும் ஈடுபடாமல் கோயிலுக்கு வெளியே நின்று குருவாயூரப்பனை வழிபட்டு இருக்கிறார்.
மேலும் அவர் கூறும் போது கோயிலுக்கு உள்ளே சென்று சாமியை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் மக்களை மதத்தின் அடிப்படையில் மதிக்காது மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்போது நிச்சயமாக உள்ளே சென்று குருவாயூரப்பனை தரிசிப்பேன் என்று கூறி இருப்பது பலரின் மத்தியில் பலவிதமான கருத்துக்களை கிளப்பி விட்டுள்ளது.
இதற்கு காரணம் அண்மைக்காலமாக இவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்து இருப்பதால்தான் இவரால் உள்ளே சென்று வழிபட முடியவில்லை என்று பல தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி வம்படியாவது ஏதாவது விஷயங்களில் மாற்றிக் கொள்வது ஒன்றும் அமலாபாடுக்கு புதிதல்ல அதுபோலவே இந்த நிகழ்வும் பார்க்கப்பட்டு விட்டதால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எனினும் ஒரு சிலர் இவர் உள்ளே சென்று வழிபட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான பதிலை காலம் தான் உறுதி செய்ய வேண்டும் என்று பலரும் மௌனத்தோடு காத்திருக்கிறார்கள்.