Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

அமலாபால் அப்படித்தான்.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த மேக்கப் ஆர்டிஸ்ட்..!

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நடிக்க துவங்கிய சில காலங்களுக்கு பிறகுதான் சர்ச்சைக்கு உள்ளாவார்கள். ஆனால் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் சர்ச்சையான ஒரு நடிகை என்றால் அது நடிகை அமலாபால்தான்.

நடிகை அமலாபால் நடிப்பில் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தின் கதைகளமே கொஞ்சம் சர்ச்சையான கதைகளமாக இருந்த காரணத்தினால் அப்பொழுதே அமலாபால் சர்ச்சைக்கு உள்ளானார்.

ஆனால் அந்த பிம்பத்தை முழுதாக மாற்றி மக்கள் மத்தியில் அவரை ஒரு நடிகையாக அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த திரைப்படம் பிரபுசாலமன் இயக்கிய மைனா. மைனா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் அமலாபால்.

தமிழில் தொடர்ந்து வாய்ப்பு:

தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா போன்ற முக்கிய நடிகர்கள் திரைப்படங்களில் எல்லாம் அமலாபால் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் தற்சமயம் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து வந்தாலும் கூட சமீப காலமாக பெரிதாக படங்களில் நடிக்கவில்லை அமலாபால்.

வெகு நாட்களுக்கு பிறகுசமீபத்தில்தான் ஆடு ஜீவிதம் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்பு அவர் நடித்த ஆடை என்கிற திரைப்படமும் வெகுவாக சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது.

இந்த நிலையில் அமலாபாலுடன் பயணித்த தமிழின் பிரபல மேக்கப் கலைஞரான ஹேமா அவரை குறித்து சர்ச்சை தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஒருமுறை சென்னையில் படபிடிப்புக்கு சென்று இருந்தோம். அந்த படபிடிப்பு நடக்கும் இடமே அதிக வெயிலாக இருந்தது.

அமலாப்பாலின் செயல்:

அங்கே நாங்கள் ஒதுங்குவதற்கு கூட இடம் என்று எதுவும் இல்லை. சுத்தமாக நிழலே இல்லாத காரணத்தினால் அப்பொழுது அமலாபாலின் கேரவன் அங்கு இருந்தது. அதில் குளிர்சாதன வசதி உண்டு அமலாபால் படப்பிடிப்பில் இருந்த காரணத்தினால் அந்த கேரவனில் சென்று நாங்கள் ஓய்வு எடுத்தோம்.

இதனை பார்த்த அமலாபால் அங்கிருந்த மேனேஜரை அழைத்து எங்களை காரவனிலிருந்து வெளியேற்றும்படி கூறினார். நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத மேனேஜர் எங்களை வெளியில் செல்ல சொல்லி விட்டார்.

பிறகு படப்பிடிப்பு முடியும் வரையில் இப்படி பல விஷயங்களில் எங்களை தொந்தரவு செய்து வந்தார் அமலாபால். இதற்கு முன்பு பல முன்னணி பாலிவுட் பிரபலங்களுக்கு கூட மேக்கப் போட்டிருக்கிறேன். ஆனால் பலரும் என்னிடம் கனிவாகதான் நடந்து கொண்டார்கள்.

அமலாபால் போல யாரும் நடந்து கொண்டது கிடையாது என்று கூறியிருக்கிறார் ஹேமா. இதனை தொடர்ந்து கடந்து வந்த பாதையை அமலாபால் மறந்துவிட்டாரா ஆரம்பத்தில் வாய்ப்புக்காக எவ்வளவு போராடிக் கொண்டிருந்தார் என்று இது குறித்து கருத்து தெரிவிக்க துவங்கியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading

More in Actress

Trending

To Top
Exit mobile version