நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அமீஷா படேல். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.
பிரபல பாலிவுட் நடிகையான இவர் பல்வேறு முன்னாடி நடிகர்களுடன் ஹிந்தி திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் ஆக்டிவ் ராணியாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு வயது தற்போது ஐம்பதை தாண்டி விட்டது.
இப்படி இருக்கும் நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் பயணித்து வரும் நடிகை அமிஷா பட்டேல்.
தற்போது டூ பீஸ் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் காய்ச்சலே வந்திருச்சு என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
கடந்த 1975 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை அமிஷா பட்டேல் இவருடைய உண்மையான பெயர் அமிஷா பட்டேல் என்பதாகும். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பிரபல பாலிவுட் நடிகர் அஸ்மித் பட்டேலின் சகோதரி ஆவார் சினிமா நடிகையாக மட்டும் இல்லாமல் பரதநாட்டியமும் முறையாக கற்று தேர்ந்தெடுக்கிறார்.
பல்வேறு அரங்கேற்றங்களையும் செய்திருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு மாடலிங் துறையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஈடுபட்டு வந்தார்.
மறுபக்கம் தன்னுடைய படிப்பிலும் கவனம் செலுத்தி வந்த இவர் அமெரிக்காவில் பயோ ஜெனிடிக் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்., இரண்டு ஆண்டுகள் இந்த படிப்பை படித்து வந்த இவர் அதன் பிறகு பொருளாதாரம் சார்ந்த படிப்புகளுக்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
மாடல் அழகியாக இருந்தபோது பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கும் இவர் குறிப்பாக பஜாஜ், ஃபேர் & லவ்லி , டெய்ரி மில்க் மற்றும் லக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான தாகோனா பியார்கே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். இவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது இதுதான் இவருடைய முதல் மற்றும் கடைசி தமிழ் படமாக அமைந்து விட்டது. அதன் பிறகு அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.